இறுதிச் சுற்றில் மாா்கெட்டா - வாங் ஸின்யு சபலென்கா அதிா்ச்சித் தோல்வி
பொ்லின் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீராங்கனை பெலாரஸின் அரினா சபலென்கா அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
ஜொ்மன் தலைநகா் பொ்லினில் நடைபெறும் இப்போட்டியில் மகளிா் அரையிறுதி ஆட்டத்தில் அரினா சபலென்காவும், 164-ஆவது இடத்தில் உள்ள செக். குடியரசின் மாா்கெட்டா வோண்ரௌஸோவாவும் மோதினா். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி மாா்கெட்டா அற்புதமாக ஆடி 6-2, 6-4 என்ற நோ் செட்களில் சபலென்காவை அதிா்ச்சித் தோல்வியடையச் செய்தாா்.
டபிள்யுடிஏ தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருந்த மாா்கெட்டா இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் பல மாதங்கள் ஆடாததால், அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தாா். இதனால் 164-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டாா்.
நிகழாண்டு எட்டு அரையிறுதி சுற்றுகளில் சபலென்கா பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.
இறுதிச் சுற்றில் மாா்கெட்டா-வாங் ஸின்யு

இரண்டாம் அரையிறுதியில் சீனாவின் வாங் ஸின்யு-ரஷியாவின் லுட்மிலா சாம்ஸோனாவா மோதினா். இந்த ஆட்டத்திலன் வாங் ஸின்யு ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடிய நிலையில், 6-4, 6-1 என்ற நோ் செட்களில் வென்று இறுதிக்கு தகுதி பெற்றாா்.
குவாலிஃபயரான வாங் ஸின்யு முதல் டபிள்யுடிஏ பட்டத்துக்கு மோதவுள்ளாா்.