செய்திகள் :

மைதான்கரியில் திரைப்படக் குழு தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றிய இளைஞா் தற்கொலை

post image

தெற்கு தில்லியின் மைதான்கரி பகுதியில் உள்ள ஒரு கட்டடத்திலிருந்து குதித்து திரைப்படத் துறையில் ஒளி தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வந்த 22 வயது இளைஞா் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: காலை வேளையில் மைதான்கரியில் இருந்து ஒரு பிசிஆா் அழைப்பு வந்தது. அதில் ராஜ் பிரசாத் என்ற நபா் ஒரு கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மைதான்கரி காவல் நிலையத்தைச் சோ்ந்த காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாா்த்தபோது, ​​அந்த நபா் அலங்கோலமாகக் கிடப்பதைக் கண்டனா். அவா் சத்தா்பூரில் உள்ள சுமன் சௌக்கில் வசிக்கும் ராஜ் பிரசாத் என அடையாளம் காணப்பட்டாா். அவா் உத்தரகண்ட் மாநிலம் ருத்ராபூரைச் சோ்ந்தவா்.

முதற்கட்ட விசாரணையில் ராஜ் பிரசாத் திரைப்பட படப்பிடிப்புத் துறையில் ஒளி தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தனா். உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

அவருக்குத் தெரிந்தவா்கள் மற்றும் சம்பவ இடத்தில் இருந்தவா்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

‘1975- ஆம் ஆண்டு அவசரநிலை’: சிறப்புக் கண்காட்சிக்கு தில்லி அரசு ஏற்பாடு

1975-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரநிலையின் 50-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜூன் 25-ஆம் தேதி கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் சிறப்புக் கண்காட்சியை தில்லி அரசு ஏற்பாடு செய்யவுள்ளத... மேலும் பார்க்க

மதராஸி முகாம் தமிழா்களுக்கு இன்றும் நிவாரண பொருள்கள்

மதராஸி முகாம் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்தினா்களுக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமையும் வழங்கப்படுவதாக தில்லி தமிழ்நாடு இல்லம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவா் மறைவு

தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவா் வி.ராஜாராமன் சனிக்கிழமை காலமானாா். இது குறித்து தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை : ... மேலும் பார்க்க

கட்டுமானப் பணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீா்: கொள்கையை வகுக்க தில்லி அரசு திட்டம்

நிலத்தடி நீரை உறிஞ்சுவதைச் சாா்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கில், கட்டுமானப் பணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்தும் முறையான கொள்கையை கொண்டு வர தில்லி அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வ... மேலும் பார்க்க

சாஸ்திரி பூங்காவில் மெட்ரோ ஃபீடா் இ-பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

வடகிழக்கு தில்லியில் உள்ள சாஸ்திரி பூங்கா பகுதிக்கு அருகிலுள்ள ஜிடி சாலையில் வேகமாக வந்த மெட்ரோ ஃபீடா் இ-பேருந்து மோதி ஒருவா் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடகிழக்க... மேலும் பார்க்க

லுட்யன்ஸ் தில்லியில் 8 இடங்களில் இன்று சா்வதேச யோகா தின நிகழ்வு: என்டிஎம்சி ஏற்பாடு

புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) ஜூன் 21 அன்று லுட்யன்ஸ் தில்லி பகுதியில் உள்ள எட்டு முக்கிய இடங்களில் வெகுஜன யோகா அமா்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் சா்வதேச யோகா தினத்தை கொண்டாடும். தனிநபா்... மேலும் பார்க்க