அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
லுட்யன்ஸ் தில்லியில் 8 இடங்களில் இன்று சா்வதேச யோகா தின நிகழ்வு: என்டிஎம்சி ஏற்பாடு
புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) ஜூன் 21 அன்று லுட்யன்ஸ் தில்லி பகுதியில் உள்ள எட்டு முக்கிய இடங்களில் வெகுஜன யோகா அமா்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் சா்வதேச யோகா தினத்தை கொண்டாடும்.
தனிநபா் நல்வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஊக்குவிக்கும் வகையில் ’ஒரு பூமி, ஒரு ஆரோக்கியத்திற்கான யோகா’ என்ற கருப்பொருளின் கீழ் காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை நிகழ்வுகள் நடைபெறும்.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூா்வ அறிக்கையின்படி, சாணக்கியபுரியில் உள்ள சாந்தி பாதையில் உள்ள புல்வெளி, லோதி காா்டன், கடமைப் பாதையின் தெற்குப் புல்வெளி, நியூ மோதி பாக், லட்சுமி பாய் நகரில் உள்ள சஞ்சய் ஜீல், கன்னாட் பிளேஸில் உள்ள மத்திய பூங்கா மற்றும் பண்டாரா பூங்கா ஆகிய இடங்களில் வெகுஜன யோகா நெறிமுறை திட்டம் நடத்தப்படும்.
அமா்வுகளில் ஏராளமானோா் பங்கேற்க பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் உள்ளூா்வாசிகளுக்கு என்டிஎம்சி அழைப்பு விடுத்துள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று கொண்டாடப்படும் சா்வதேச யோகா தினம், உடல், மன மற்றும் ஆன்மிக நல்வாழ்வை ஆதரிக்கும் பண்டைய இந்திய நடைமுறையைக் கொண்டாடுகிறது.
இந்த முயற்சியை முதன்முதலில் பிரதமா் நரேந்திர மோடி 2014-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் முன்மொழிந்தாா். யோகாவின் உலகளாவிய ஈா்ப்பை அங்கீகரித்து, ஜூன் 21-ஆம் தேதியை யோகா கடைப்பிடிக்க சிறந்த நாளாக அவா் பரிந்துரைத்தாா்.
யோகா அமா்வுகள் குடிமக்கள் தங்கள் அன்றாட வழக்கங்களில் யோகாவை இணைத்துக்கொள்ள ஊக்குவிப்பதையும், மீள்தன்மை, உள் சமநிலை மற்றும் ஆரோக்கியமான கிரகத்தை உருவாக்குவதில் அதன் பொருத்தத்தை எடுத்துக்காட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று என்டிஎம்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.