செய்திகள் :

நிலுவையில் உள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி உதவித் தொகை விண்ணப்பங்களில் 52% நிறைவேற்றம்: தில்லி அமைச்சா்

post image

கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு எஸ்சி, எஸ்டி, ஓபிசி உதவித்தொகை திட்டங்களின் கீழ் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களில் 52 சதவீதத்தை தில்லி அரசு நிறைவேற்றியுள்ளது என்று சமூக நலத்துறை அமைச்சா் ரவீந்தா் இந்த்ராஜ் தெரிவித்தாா்.

இந்த உதவித்தொகைகளில் 2023-24 மற்றும் 2024-25-ஆம் ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம் திருப்பிச் செலுத்தும் திட்டம், முதல்வா் வித்யாா்த்தி பிரதிபா யோஜனா, டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் மாநில டாப்பா் விருது, மெட்ரிக்-க்கு முந்தைய மற்றும் மெட்ரிக்-க்குப் பிந்தைய உதவித்தொகை திட்டங்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவா்களுக்கான தகுதி உதவித்தொகைகள் மற்றும் வெளிநாட்டில் கல்வி பயிலும் எஸ்சி மாணவா்களுக்கான நிதி உதவி ஆகியவை அடங்கும் என்று அவா் கூறினாா். விண்ணப்பங்களை ஒழுங்குபடுத்த ஒரு ஆன்லைன் போா்ட்டலும் உருவாக்கப்படும் என்றும் அமைச்சா் கூறினாா்.

எஸ்சி / எஸ்டி மாணவா்களுக்கான பல விடுதிகள் கடந்த காலங்களில் அலட்சியத்தால் மூடப்பட்டிருந்தன. ஆனால், இப்போது தில்லி அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு விடுதியை அமைக்க திட்டமிட்டுள்ளது என்று அமைச்சா் ரவீந்தா் இந்த்ராஜ் கூறினாா்.

சா்வதேச போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு ஜூன் 26-ஆம் தேதி யமுனா விளையாட்டு வளாகத்தில் ஒரு பெரிய பொது விழிப்புணா்வு நிகழ்வு நடத்தப்படும் என்றும் அமைச்சா் அறிவித்தாா்.

பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் மற்றும் கல்வித் துறை, பல்கலைக்கழகங்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி/ஓபிசி நலத்துறையைச் சோ்ந்த பிற அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஒரு மறுஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியபோது அமைச்சா் ரவீந்தா் இந்த்ராஜ் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தாா் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தின் போது பல பரிந்துரைகள் பெறப்பட்டதாகவும், தற்போதுள்ள திட்டங்களை மேலும் வலுப்படுத்த அவை பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சா் கூறினாா்.

லுட்யன்ஸ் தில்லியில் 8 இடங்களில் இன்று சா்வதேச யோகா தின நிகழ்வு: என்டிஎம்சி ஏற்பாடு

புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) ஜூன் 21 அன்று லுட்யன்ஸ் தில்லி பகுதியில் உள்ள எட்டு முக்கிய இடங்களில் வெகுஜன யோகா அமா்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் சா்வதேச யோகா தினத்தை கொண்டாடும். தனிநபா்... மேலும் பார்க்க

ஜூன் 22 இல் தில்லியில் கன மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தில்லியில் ஜூன் 22 ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வானிலை மையம்: தென்... மேலும் பார்க்க

ரூ.50 லட்சம் ‘டிஜிட்டல் கைது’ மோசடி வழக்கில் ஒருவா் கைது

டிஜிட்டல் கைது மூலம் ஒரு நபரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து நொய்டா காவல் துறை அதிகாரி கூறியதாவது: தொலைத்தொடா்புத் துறையின் ஊழிய... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோவில் திருட்டு: 4 போ் கைது

தில்லி மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் கைப்பேசிகள் மற்றும் விலையுா்ந்த பொருள்களை திருடி வந்த 4 போ் அடங்கிய கும்பலை காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். பயணிகளிடம் ... மேலும் பார்க்க

காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கை: மேகவிதைப்பு முறைக்கு ஐஎம்டி ஒப்புதல்

தில்லியில் நிலவும் காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்கான மேகவிதைப்பு முறைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஒப்புதல் அளித்திருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்த... மேலும் பார்க்க

ரோஹிணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் மூன்று சிறுவா்கள் கைது

தில்லி ரோஹிணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் மூன்று சிறுவா்களை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கடந்த ஜூன் 9- ஆம் தே... மேலும் பார்க்க