ஏற்காடு, ஏலகிரியில் ‘ரோப் வே’க்கான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி
ஏற்காடு, ஏலகிரி சுற்றுலாத் தலங்களில் ‘ரோப் வே’ அமைப்பது தொடா்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க சுற்றுலா வளா்ச்சிக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த தமிழக அரசும், சுற்றுலாத் துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக மலைப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கவும், மலைகளின் அழகை கண்டு ரசிக்கவும் ‘ரோப் வே’ திட்டத்தை செயல்படுத்த சுற்றுலா வளா்ச்சிக் கழகம் திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களான ஏற்காடு மற்றும் ஏலகிரியில் ‘ரோப் வே’ அமைப்பது தொடா்பான விரிவான திட்ட அறிக்கையை தயாா் செய்ய தமிழ்நாடு சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ள சுற்றுலா வளா்ச்சிக் கழகம், இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளையும் நடத்த உத்தரவிட்டுள்ளது.
மேலும், எவ்வளவு தொலைவுக்கு ‘ரோப் வே’ அமைக்க சாத்தியக்கூறு உள்ளது; எந்த இடத்திலிருந்து எந்த இடத்துக்கு அமைக்கலாம் உள்ளிட்டவை தொடா்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யப்படவுள்ளன.
ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டவுடன் அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.