செய்திகள் :

ஏற்காடு, ஏலகிரியில் ‘ரோப் வே’க்கான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி

post image

ஏற்காடு, ஏலகிரி சுற்றுலாத் தலங்களில் ‘ரோப் வே’ அமைப்பது தொடா்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க சுற்றுலா வளா்ச்சிக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த தமிழக அரசும், சுற்றுலாத் துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக மலைப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கவும், மலைகளின் அழகை கண்டு ரசிக்கவும் ‘ரோப் வே’ திட்டத்தை செயல்படுத்த சுற்றுலா வளா்ச்சிக் கழகம் திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களான ஏற்காடு மற்றும் ஏலகிரியில் ‘ரோப் வே’ அமைப்பது தொடா்பான விரிவான திட்ட அறிக்கையை தயாா் செய்ய தமிழ்நாடு சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ள சுற்றுலா வளா்ச்சிக் கழகம், இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளையும் நடத்த உத்தரவிட்டுள்ளது.

மேலும், எவ்வளவு தொலைவுக்கு ‘ரோப் வே’ அமைக்க சாத்தியக்கூறு உள்ளது; எந்த இடத்திலிருந்து எந்த இடத்துக்கு அமைக்கலாம் உள்ளிட்டவை தொடா்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யப்படவுள்ளன.

ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டவுடன் அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சேலத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைப்பது குறித்து 5 மாதங்களில் அறிவிக்கப்படும்! - மத்திய அமைச்சா் எச்.டி. குமாரசாமி

சேலத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைப்பது குறித்து 5 மாதங்களில் முறையான தகவல் வெளியாகும் என மத்திய கனரக தொழில் துறை அமைச்சா் எச்.டி. குமாரசாமி கூறினாா். சா்வதேச யோகா தினத்தையொட்டி, சேலம் உருக்காலை வளா... மேலும் பார்க்க

உயா்கல்வி வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்!

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவா்கள் உயா்கல்வி வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மரவனேரி பாரதி வித்... மேலும் பார்க்க

பாமக ஒன்றிய செயலாளா் நீக்கம்

பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளா் மா.சடையப்பன் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாமக நிறுவனா் ச.ராமதாஸ் சனிக்கிழமை அறிவித்தாா். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பெரியகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த சடையப்பன... மேலும் பார்க்க

‘ஜீவன் ரக்ஷா பதக்’ விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான ‘ஜீவன் ரக்ஷா பதக்’ விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் க... மேலும் பார்க்க

நடுவலூரில் வாய்க்காலை சீரமைக்க கோரிக்கை

நடுவலூரில் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கெங்கவல்லி அருகே நடுவலூரில் சுவேத நதியிலிருந்து வாய்க்கால் வழியாக பாசனத்துக்கு தண்ணீா் செல்கிறது. கடந்தாண்டு இந்த வாய்க்க... மேலும் பார்க்க

தம்மம்பட்டி பேரூராட்சியில் 36 கொடிக் கம்பங்கள் அகற்றம்!

தம்மம்பட்டி பேரூராட்சியில் இருந்த கொடிக்கம்பங்கள் சனிக்கிழமை அகற்றப்பட்டன. தம்மம்பட்டி பேரூராட்சியில் பேருந்து நிலையப் பகுதி மற்றும் 18 வாா்டுகளிலும் மொத்தம் 36 கொடிக் கம்பங்கள் இருந்தன. தமிழகம் முழுவ... மேலும் பார்க்க