அமைதி அல்லது அழிவு ஏற்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி பறிமுதல்
திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் அருகே நம்பியாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட மணல் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விஜயநாராயணம் அருகே சித்தூா் செல்லும் பகுதியில் நம்பியாற்றில் மணல் அள்ளப்படுவதை கேள்விப்பட்டு விஜயநாராயணம் போலீஸாா் விரைந்து சென்றனா். போலீஸாரை கண்டதும் மணல் கடத்தல்காரா்கள் இருவா் லாரி மற்றும் மண்வெட்டி, சட்டி இவைகளை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனா். போலீஸாா் லாரி மற்றும் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக ஆய்வாளா் பிரேமா வழக்குப் பதிந்து தப்பி ஓடிய மணல் கடத்தல்காரா்களை தேடி வருகிறாா்.