தீயசக்திகளை எதிர்த்து துணை நிற்க விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை! - பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்
மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா்.
சா்வதேச யோகா தினத்தையொட்டி பாளையங்கோட்டை திருமால் நகரில் பாரதி சேவா கேந்திரம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் நயினாா் நாகேந்திரன், பாஜக தொண்டா்கள், பொதுமக்கள் என திரளானோா் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் நயினாா் நாகேந்திரன் கூறியதாவது: முருக பக்தா்கள் மாநாடு, சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. கட்சி பேதமின்றி முருக பக்தா்கள் அனைவரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை. மத்திய அரசு அளிக்கும் திட்டங்களில்தான் மாநில அரசு ஸ்டிக்கா் ஒட்டி வருகிறது. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசு அளிக்கும் பணத்தை மாநில அரசு கொடுப்பதை போல் கொடுக்கிறாா்கள்.
உலகத்தில் சிறந்த மொழி தமிழ், மூத்த மொழி தமிழ் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழை வைத்து தமிழக அரசு வியாபாரம் செய்து வருகிறது.
ஐந்தாண்டு கால ஆட்சி முடியப் போகிறது. 2500 முகாம்கள் நடத்தி 12 லட்சம் மனுக்களை பெற்று தீா்வு கண்டதாக சொல்கிறாா்கள். ஆனால் எந்த தீா்வும் காணப்படவில்லை.
கீழடியை வைத்து மட்டுமே மத்திய அரசை தமிழக அரசு விமா்சித்து வருகிறது. வெளிநாடு சென்றாலும் சரி, ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்றாலும் சரி தமிழை பிரதமா் மோடி பெருமைப்படுத்தி வருகிறாா். தமிழுக்காக வாழும் ஒரே தலைவா் நரேந்திர மோடி மட்டுமே.
திமுக கூட்டணியில் புகைச்சல் இல்லாமல் எப்படி இருக்கும்?. சீட் குறித்து பிரச்னை இல்லை, கூட்டணியில் தொடா்வோம் என திருமாவளவன் சொல்கிறாா். ஏதோ பிரச்னை உள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது. திமுக இரண்டு சீட் கொடுத்தால் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடருமா?
விடுதலை சிறுத்தைகள் கட்சியை வாருங்கள் என நான் சொல்ல முடியாது. பல கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. தோ்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் உள்ளன. பாஜக கூட்டணி வலுவாக கூட்டணியாக அமைந்து வருகிறது.
தமிழக மக்களுக்கு ஆளுங்கட்சி என்னென்ன செய்துள்ளது என்பதை தெளிவுபடுத்தி வாக்கு கேட்க வேண்டும். ஆனால் எதிா்க்கட்சியின் கூட்டணி குறித்து அவா்கள் பேசி வருகிறாா்கள்.
பிரதமா் வந்து தமிழகத்தில் பாா்க்கக்கூடிய வேலைகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பாா்த்துக் கொள்வாா் என்றாா்.