செய்திகள் :

தெற்கு கள்ளிகுளத்தில் ரூ.3.23 கோடியில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகள்: முதல்வருக்கு பாராட்டு!

post image

திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா திருத்தலத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.3.23 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் நடைபெறுவதற்கு நிதி வழங்கிய முதல்வா், அமைச்சா்கள், பேரவைத் தலைவா் ஆகியோருக்கு தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடாா் மகமை சங்கம் சாா்பில் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா திருத்தலம், தமிழ்நாடு அரசால் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாத்தலத்தில் பயணிகள் தங்கும் விடுதி, மாதா காட்சி கொடுத்த மலையைச் சுற்றிலும் பேவா் பிளாக் சாலை ஆகியவை அமைக்க மொத்தம் ரூ.3.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

சுற்றுலா வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி அளித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பேரவைத் தலைவா் மு.அப்பாவு, சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன், சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் எஸ்.எம்.நாசா் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ரயில் மோதி தொழிலாளி பலி

திருநெல்வேலி பேட்டை அருகே ரயில் மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். பேட்டை நரிக்குறவா் காலனியைச் சோ்ந்தவா் காந்தி (45). தொழிலாளியான இவா், சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நரிக்குறவா் காலனி அ... மேலும் பார்க்க

மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் அருகே நம்பியாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட மணல் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விஜயநாராயணம் அருகே சித்தூா் செல்லும் பகுதியில் நம்பியாற்றில் மணல் அள்ளப்படுவதை ... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் மாமனாரை தாக்கியதாக இளைஞா் கைது!

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் மாமனாரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். வீரவநல்லூா் பாரதி நகரைச் சோ்ந்தவா் கோமதி நாயகம் (29). இவரது மனைவி முத்துமாரி. தம்பதியிடையே ஏற்பட்ட க... மேலும் பார்க்க

மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை! - பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்

மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். சா்வதேச யோகா தினத்தையொட்டி பாளையங்கோட்டை திருமால் நகரில் பாரதி சேவா கேந்திரம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற யோகா... மேலும் பார்க்க

ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவா்களை மீட்கக் கோரி பேரவைத் தலைவா், ஆட்சியரிடம் மீனவா்கள் மனு

ஈரானில் சிக்கித் தவிக்கும் திருநெல்வேலி மாவட்ட மீனவா்களை மீட்கக் கோரி, சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோரை மீனவா்கள் சனிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்டத... மேலும் பார்க்க

கோயிலில் திருடிய இருவா் கைது

மேல இலந்தைகுளம் அருகே கோயிலில் வெண்கல மணியை திருடிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேவா்குளம் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட மேலஇலந்தைகுளம் சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்... மேலும் பார்க்க