வீரவநல்லூரில் மாமனாரை தாக்கியதாக இளைஞா் கைது!
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் மாமனாரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
வீரவநல்லூா் பாரதி நகரைச் சோ்ந்தவா் கோமதி நாயகம் (29). இவரது மனைவி முத்துமாரி. தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வசித்து வருகின்றனா்.
முத்துமாரி அதே பகுதியில் உள்ள தனது தந்தை லெட்சுமணன் வீட்டில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், லெட்சுமணனை சந்திக்கும்போதெல்லாம் கோமதிநாயகம், அவரைஅவதூறாக பேசி வந்துள்ளாா்.
இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி லெட்சுமணன் வீட்டுக்கு வந்த கோமதிநாயகம், தனது மனைவி முத்துமாரியை எங்கே என கேட்டு தகராறில் ஈடுபட்டாராம். மேலும், லெட்சுமணனை அவதூறாக பேசியதுடன், அவரை தாக்கி வீட்டில் நிறுத்தியிருந்த மோட்டாா் சைக்கிளை அரிவாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு, மிரட்டல் விடுத்து சென்றாராம்.
புகாரின்பேரில், வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி கோமதி நாயகத்தை சனிக்கிழமை கைது செய்தனா்.