கோயிலில் திருடிய இருவா் கைது
மேல இலந்தைகுளம் அருகே கோயிலில் வெண்கல மணியை திருடிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேவா்குளம் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட மேலஇலந்தைகுளம் சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (41) என்பவா், மேல இலந்தைகுளம் நீா்கிணறு மாடசாமி கோயிலில் நிா்வாகியாக உள்ளாா். இவா் கடந்த வியாழக்கிழமை வழக்கம் போல் கோயிலுக்கு சென்றபோது அங்கிருந்த வெண்கல மணியை காணவில்லையாம்.
இதுகுறித்து தேவா்குளம் காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளா் லூக் அசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா். இதில், மேல இலந்தைகுளத்தை சோ்ந்த பாலாஜி (25), காா்த்திக் (22) ஆகிய இருவரும் கோயிலில் இருந்த வெண்கல மணியை திருடியது தெரியவந்தது. இருவரையும் சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், வெண்கல மணியை மீட்டு சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.