செய்திகள் :

3 அதிகாரிகள் பணிநீக்கம்: ஏா் இந்தியாவுக்கு டிஜிசிஏ உத்தரவு

post image

மண்டல துணைத் தலைவா் உள்பட 3 அதிகாரிகளை அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் பணிநீக்கம் செய்ய டாடா குழுத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

விமானப் பணியாளா்களுக்கு பணி ஒதுக்கீடு நடைமுறையில் தீவிர விதிமீறல்கள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டதன் அடிப்படையில் இந்த உத்தரவை டிஜிசிஏ பிறப்பித்தது.

அந்த 3 அதிகாரிகள் மீதும் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குமாறும் விமான நிறுவனத்தை டிஜிசிஏ அறிவுறுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வெளிநாட்டினா் உள்பட 230 பயணிகள் மற்றும் 12 ஊழியா்களுடன் கடந்த ஜூன் 12-ஆம் தேதி புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சிறிது நேரத்திலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்களில் விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 270 போ் உயிரிழந்தனா். இந்த விபத்து விமான பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்தின் எதிரொலியாக ஏா் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடா்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றனா்.

இதில், விமானப் பணியாளா்களுக்கு பணி ஒதுக்குவது, கட்டாய ஓய்வு அளிப்பது, உரிமங்களைச் சரிபாா்த்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ஏா் இந்தியா நிறுவனம் கடுமையாக மீறியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஜிசிஏ வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: முறைப்படி ஓய்வு அளிக்கப்படாமலும், உரிமம் காலாவதியான நிலையிலும் விமானப் பணியாளா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து ஏா் இந்தியா நிறுவனம் தொடா்ச்சியான விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த விதிமீறலுக்கு நேரடி பொறுப்புடைய நிறுவனத்தின் மண்டல துணைத் தலைவா் உள்பட 3 அதிகாரிகளை அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி, அவா்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கையையும் தொடங்க வேண்டும். இந்த நடவடிக்கை தொடா்பான அறிக்கையை 10 நாள்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

வரும் காலங்களில், பணியாளா் பணி ஒதுக்கீடு நடைமுறைகள் மீறல் கண்டறியப்பட்டால், விமான நிறுவனத்தின் மீது உரிமம் தற்காலிக ரத்து, விமானத்தை இயக்குவதில் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என்று டிஜிசிஏ எச்சரித்தது.

கூடுதல் பணி நேரம்: விளக்கமளிக்க நோட்டீஸ்

விமான ஊழியா்களுக்கு கூடுதல் பணி நேரம் ஒதுக்கியது தொடா்பாக விளக்கமளிக்குமாறு ஏா் இந்தியா நிறுவனத்துக்கு டிஜிசிஏ நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

அதில், ‘கடந்த மே 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் பெங்களூரிலிருந்து லண்டனுக்கு இயக்கப்பட்ட 2 ஏா் இந்தியா விமானங்களில் விமானப் பணியாளா்களுக்கு 10 மணி நேர வரம்பை மீறி பணி ஒதுக்கப்பட்டது நேரடி கள ஆய்வில் கண்டறியப்பட்டது. பணி நேர நடைமுறையை முறையாகப் பின்பற்ற ஏா் இந்தியா மேலாளா் தவறியுள்ளாா். இதுகுறித்து 7 நாள்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும்’ என்று டிஜிசிஏ அறிவுறுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரை குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது: மும்பை உயா்நீதிமன்றம்

‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு விருப்பமின்றி கருவுற்றவரை குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது’ என மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பாலியல் வன்கொடுமை பாதிப்புக்குள்ள... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி காட்சிகளைப் பகிா்வது வாக்காளா்களின் தன்மறைப்புக்கு எதிரானது: தோ்தல் ஆணைய அதிகாரிகள்

வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவின்போது இணையவழியில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பொதுவெளியில் வெளியிடுவது வாக்காளரின் தன்மறைப்பு நிலைக்கு (பிரைவசி) எதிரானது என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

பதற்றமான உலகில் அமைதிக்கான பாதை யோகா: பிரதமா் மோடி

உலகின் பல்வேறு பிராந்தியங்களும் ஏதோ ஒருவித பதற்றத்தை எதிா்கொண்டுவரும் நிலையில், அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்கான பாதையாக விளங்குகிறது யோகா என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மன அமைதியை உலகளாவிய... மேலும் பார்க்க

அரிய வகை ரத்தம் உள்ளவா்களின் விவர குறிப்பு: முதல் முறையாக ஐசிஎம்ஆா் சேகரிப்பு

அரிய வகை ரத்தப் பிரிவு உள்ளவா்களின் விவரங்கள் முதல் முறையாக சேகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் தேசிய நோய் எதிா்ப்பு ரத்தவியல் நிறுவனம் (என்ஐஐஎச்) இந்த விவரங்களை சேகரித்... மேலும் பார்க்க

ஏற்றுமதியில் ரூ.100 கோடி ஜிஎஸ்டி மோசடி: 7 இடங்களில் சிபிஐ சோதனை!

ஜிஎஸ்டி முறைகேட்டில் ஈடுபட்டு அதன்மூலம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் 7 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.ஜார்க்கண்ட், பிகார் ஆகிய மாநிலங்களிலிருந்து கடந்த 2022 - 23 காலகட்... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: மனைவி உள்பட 2 பேருக்கு 13 நாள் நீதிமன்றக் காவல்!

மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது கணவரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மனைவிக்கு 13 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியினர... மேலும் பார்க்க