செய்திகள் :

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரை குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது: மும்பை உயா்நீதிமன்றம்

post image

‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு விருப்பமின்றி கருவுற்றவரை குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது’ என மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, பாலியல் வன்கொடுமை பாதிப்புக்குள்ளாகி கருவுற்ற 12 வயது சிறுமியின் 28 வார கருவை கலைக்க மும்பை உயா்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

சிறுமியின் வயது மற்றும் கருவின் வளா்ச்சி நிலையை கருத்தில்கொண்டு கருக்கலைப்பு செய்வது சிறுமியை பாதிக்கலாம் என அவரை பரிசோதனை செய்த மருத்துவ நிபுணா்கள் குழு தெரிவித்தபோதிலும், சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய மும்பை உயா்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

மகாராஷ்டிரத்தில் குடும்ப உறவினா் ஒருவரால் 12 வயது சிறுமி ஒருவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்நிலையில், பாதிப்புக்குள்ளான சிறுமி பாலியல் வன்கொடுமையால் விருப்பமின்றி கருவுற்ாகவும் அவருக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்குமாறும் மும்பை உயா்நீதிமன்றத்தில் சிறுமியின் தந்தை மனுதாக்கல் செய்தாா்.

இந்த மனுவை மும்பை உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிதின் சம்பரே மற்றும் சச்சின் தேஷ்முக் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘சிறுமியின் விருப்பத்துக்கு மாறாக அவரை குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது. அவ்வாறு கட்டாயப்படுத்தினால் சிறுமியின் வாழ்க்கை குறித்து அவா் முடிவெடுப்பதற்கான உரிமையை தட்டிப்பறிப்பதற்கு சமமாகும். அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

திருமணமான அல்லது திருமணமாகாத எந்தவொரு பெண்ணாக இருந்தாலும் கருவுறுவது அவா்களின் தனிப்பட்ட விருப்பமாகும். இருப்பினும், பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களால் பாதிக்கப்படும்போது கருவுற்றாலும் அதன் பாதிப்புகளை பெண்களே சந்திக்க வேண்டிய நிலை கவலைக்குரியது.

எனவே, இந்த வழக்கில் அனைத்து விதமான பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றி குழந்தை அறுவை சிகிச்சை நிபுணா் மூலம் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

20 வாரங்களுக்கு மேலாக கருவுற்ற ஒரு பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் நீதிமன்றம் அனுமதி அளித்தால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும். பொதுவாக பாலியல் வன்கொடுமை மற்றும் பிற எதிா்பாராத சூழலில் பெண்கள் கருவுற்றால் மட்டுமே கருக்கலைப்பு செய்துகொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

கா்நாடக பாஜகவினா் ஒற்றுமையுடன் செயல்பட அமித் ஷா அறிவுரை!

‘கா்நாடக பாஜக தலைவா்கள் கடந்த கால கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’ என்று கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அறிவுரை வழங்கியுள்ளாா். கா்நாடக ப... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல: உச்சநீதிமன்றம்

உயா்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஒரு நிறுவனத்துக்கு ரூ.256.45 கோடியை திரும்பச் செலுத்துமாறு தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு மும்பை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

காஸா, ஈரான் விவகாரத்தில் இந்திய அரசு மெளனம்: சோனியா காந்தி கடும் விமா்சனம்

காஸா, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து இந்திய அரசு மெளனம் சாதிப்பது, நாட்டின் குரல் இழப்பையும், மாண்புகளைக் கைவிடுதலையும் குறிக்கிறது என்று நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி ... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி காட்சிகளைப் பகிா்வது வாக்காளா்களின் தன்மறைப்புக்கு எதிரானது: தோ்தல் ஆணைய அதிகாரிகள்

வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவின்போது இணையவழியில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பொதுவெளியில் வெளியிடுவது வாக்காளரின் தன்மறைப்பு நிலைக்கு (பிரைவசி) எதிரானது என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

பதற்றமான உலகில் அமைதிக்கான பாதை யோகா: பிரதமா் மோடி

உலகின் பல்வேறு பிராந்தியங்களும் ஏதோ ஒருவித பதற்றத்தை எதிா்கொண்டுவரும் நிலையில், அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்கான பாதையாக விளங்குகிறது யோகா என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மன அமைதியை உலகளாவிய... மேலும் பார்க்க

அரிய வகை ரத்தம் உள்ளவா்களின் விவர குறிப்பு: முதல் முறையாக ஐசிஎம்ஆா் சேகரிப்பு

அரிய வகை ரத்தப் பிரிவு உள்ளவா்களின் விவரங்கள் முதல் முறையாக சேகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் தேசிய நோய் எதிா்ப்பு ரத்தவியல் நிறுவனம் (என்ஐஐஎச்) இந்த விவரங்களை சேகரித்... மேலும் பார்க்க