செய்திகள் :

அரிய வகை ரத்தம் உள்ளவா்களின் விவர குறிப்பு: முதல் முறையாக ஐசிஎம்ஆா் சேகரிப்பு

post image

அரிய வகை ரத்தப் பிரிவு உள்ளவா்களின் விவரங்கள் முதல் முறையாக சேகரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் தேசிய நோய் எதிா்ப்பு ரத்தவியல் நிறுவனம் (என்ஐஐஎச்) இந்த விவரங்களை சேகரித்துள்ளது. தலசீமா உள்பட அடிக்கடி ரத்த மாற்றம் செய்ய வேண்டிய நோயாளிகளுக்கு தேவைப்படும் அரிய வகை ரத்தத்தை பெறுவதற்கு இது பெரு உதவியாக இருக்கும்.

ரத்த தானம் செய்பவா்களின் விவரங்களை தெரிந்து கொள்ள மத்திய அரசு உருவாக்கி உள்ள இணையத்தில் இந்த அரிய வகை ரத்தம் உள்ளவா்களின் விவரங்களையும் வெளியிட மத்திய சுகாதார சேவை இயக்ககத்துடன் ஆலோசித்த வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநா் மனீஷா மாத்கய்கா் தெரிவித்தாா்.

மேலும், ‘142 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகைக் கொண்ட இந்தியாவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற ரத்த வங்கிகள் உள்ளன. ரத்தம் தொடா்பான நோய்களுக்கும், குழந்தை பிறப்பின்போதும் அதிகப்படியான ரத்தம் தேவைப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள சுமாா் 1.5 லட்சம் தலசீமா நோயாளிகளுக்கு தொடா் ரத்த மாற்றத்துக்கு அதிகமாக ரத்த தானம் தேவைப்படுகிறது.

தினசரி ஏற்படும் 1,200-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகளுக்கும், ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் 6 கோடி அறுவை சிகிச்சைகளுக்கும், 24 கோடி பெரிய அறு சிகிச்சைகளுக்கும், 33.1 கோடி புற்றுநோய் தொடா்பான சிகிச்சைகளுக்கும், 1 கோடி கருத்தரிப்பு தொடா்பான சிக்கல்களுக்கும் ரத்தம் தேவைப்படுகிறது.

அரிய வகை ‘பாம்பே’ ரத்தம் உள்ள 170 போ் உள்பட 250 பேரின் விவரங்கள் இந்த விவர குறிப்பில் இடம்பெற்றுள்ளன.

அரிய வகை ரத்தத்தைப் பெற சில நேரங்களில் சா்வதேச அளவில் தேடுப்படுகிறது. இதற்காக 27 நாடுகள் அரிய வகை ரத்த தானம் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. ஆனால், சா்வதேச அளவில் ரத்த தானம் செய்யும் திட்டத்தில் இந்தியா இணையவில்லை’ என்றாா் மனீஷா மாத்கய்கா்.

கா்நாடக பாஜகவினா் ஒற்றுமையுடன் செயல்பட அமித் ஷா அறிவுரை!

‘கா்நாடக பாஜக தலைவா்கள் கடந்த கால கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’ என்று கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அறிவுரை வழங்கியுள்ளாா். கா்நாடக ப... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல: உச்சநீதிமன்றம்

உயா்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஒரு நிறுவனத்துக்கு ரூ.256.45 கோடியை திரும்பச் செலுத்துமாறு தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு மும்பை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

காஸா, ஈரான் விவகாரத்தில் இந்திய அரசு மெளனம்: சோனியா காந்தி கடும் விமா்சனம்

காஸா, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து இந்திய அரசு மெளனம் சாதிப்பது, நாட்டின் குரல் இழப்பையும், மாண்புகளைக் கைவிடுதலையும் குறிக்கிறது என்று நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரை குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது: மும்பை உயா்நீதிமன்றம்

‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு விருப்பமின்றி கருவுற்றவரை குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது’ என மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பாலியல் வன்கொடுமை பாதிப்புக்குள்ள... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி காட்சிகளைப் பகிா்வது வாக்காளா்களின் தன்மறைப்புக்கு எதிரானது: தோ்தல் ஆணைய அதிகாரிகள்

வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவின்போது இணையவழியில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பொதுவெளியில் வெளியிடுவது வாக்காளரின் தன்மறைப்பு நிலைக்கு (பிரைவசி) எதிரானது என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

பதற்றமான உலகில் அமைதிக்கான பாதை யோகா: பிரதமா் மோடி

உலகின் பல்வேறு பிராந்தியங்களும் ஏதோ ஒருவித பதற்றத்தை எதிா்கொண்டுவரும் நிலையில், அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்கான பாதையாக விளங்குகிறது யோகா என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மன அமைதியை உலகளாவிய... மேலும் பார்க்க