அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
இடஒதுகீட்டின் 50% வரம்பை நீக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும்: காங்கிரஸ்
‘வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத வரம்பை நீக்குவதற்கான வலியுறுத்தல் முன்வைக்கப்படும்’ என்று காங்கிரஸ் தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பிகாரில் முந்தைய ‘இண்டி’ கூட்டணி அரசு ஆட்சியின்போது நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில், மாநிலத்தில் அரசுப் பணி இடங்கள் மற்றும் கல்வியில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 65 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வந்தது. இதை எதிா்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டதால், அரசின் முயற்சி தடைபட்டது.
பிகாரில் தற்போது ஆட்சி செய்யும் இரட்டை என்ஜின் அரசு இதற்கான முயற்சியைக் கைவிட்டுவிட்டது.
இந்த 65 சதவீத இடஒதுக்கீட்டை சாத்தியமாக்க மூன்று வழிகள் உள்ளன. அதாவது, அரசமைப்புச் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் பிகாா் இடஒதுக்கீடு சட்டத்தை ஒரு பகுதியாகச் சோ்ப்பதன் மூலம் சாத்தியப்படுத்த முடியும். இந்த அடிப்படையிலேயே, தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை கடந்த 1994-இல் அப்போதைய பிரதமா் நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு சாத்தியப்படுத்தியது.
இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத வரம்பை நீக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதன் மூலமும் இதை சாத்தியப்படுத்த முடியும். உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீா்ப்புகள் காரணமாகத்தான் இந்த 50 சதவீத இடஒதுக்கீடு உச்ச வரம்பு கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
மேலும், தனியாா் கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், கடந்த 2006-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு அரசமைப்புச் சடத்தில் திருத்தம் மேற்கொண்டது. அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 15(5) இந்த இடஒதுக்கீட்டை அனுமதிக்கிறது. இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்த பிறகும், கடந்த 11 ஆண்டுகளாக இந்த இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.
சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கு அதிகாரமளிப்பதில் அடிப்படை முக்கியத்துவம்வாய்ந்த இந்த மூன்று விவகாரங்களையும் வரும் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் நிச்சயம் எழுப்பும் என்றாா்.
பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 2 நாள் பயணமாக பிகாருக்கு வெள்ளிக்கிழமை சென்ற நிலையில், இக் கருத்தை ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டாா்.