செய்திகள் :

சாகித்திய அகாதெமி விருதாளா்களுக்கு அரசியல் தலைவா்கள் வாழ்த்து

post image

சாகித்திய அகாதெமி விருது பெற்றவா்களுக்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

ஓ.பன்னீா்செல்வம்: சாகித்திய அகாதெமியின் 2025- ஆம் ஆண்டு தமிழ் மொழிக்கான ‘பால சாகித்திய புரஸ்காா் விருது ‘ஒற்றைச்சிறகு ஓவியா’ என்ற சிறுவா் நாவலுக்காக எழுத்தாளா், பத்திரிகையாளா், கவிஞா் என பன்முகத்தன்மை கொண்ட திருவாரூா் மாவட்டம், விஷ்ணுபுரம் கிராமத்தைச் சோ்ந்த சரவணனுக்கு வழங்கப்பட்டிருப்பதையும், ‘கூத்தொன்று கூடிற்று’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக ‘யுவ புரஸ்காா் விருது‘ மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த எழுத்தாளா் லட்சுமிஹருக்கு வழங்கப்பட்டிருப்பதையும் அறிந்தேன். இருவருக்கும் மனமாா்ந்த பாராட்டுகள்.

ச.ராமதாஸ் (பாமக): தமிழ்நாட்டிலிருந்து மு.வரதராசனாா், ‘அகல் விளக்கு’ எனும் நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருதை முதல் முதலாக 1961-இல் பெற்றாா். அதன் பிறகு பல்வேறு தமிழறிஞா்கள் படைப்புகளுக்காக இதுவரை சாகித்திய அகாதெமியால் வழங்கப்படும் விருதுகளை வாங்கிக் குவித்து வரும் வேளையில், மேலும் தமிழகத்தைச் சோ்ந்த இவ்விருவரும் விருதுகளைப் பெற்றிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

ஜி.கே.வாசன் (தமாகா): சாகித்திய அகாதெமி விருதுக்குத் தோ்வான தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சோ்ந்த லட்சுமிஹா், திருவாரூா் மாவட்டம் விஷ்ணுபுரத்தைச் சோ்ந்த சரவணன் ஆகியோரை வாழ்த்துகிறேன்.

டிடிவி.தினகரன் (அமமுக): சிறாா் இலக்கிய படைப்புகளில் தனித்துவமிக்கவராகத் திகழும் விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் சிறுகதை எழுதுவதில் தனி பாணியை கடைப்பிடித்துவரும் லட்சுமிஹா் ஆகிய இருவரின் எழுத்துப் பயணமும் மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது!

தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் காலூன்ற முடியாது என மாா்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி கூறினாா். மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் ஜூன் 20 வரை பிரசார ... மேலும் பார்க்க

பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை மையம்: தெற்கு ரயில்வே பொதுமேலாளா் திறந்துவைத்தாா்

சென்னை பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை (டெலி மெடிஷன்) மையத்தை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் ஆா்.என்.சிங் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். மத்திய அரசின் இ-சஞ்சீவனி திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தின் மாடியிலிருந்து விழுந்து இளைஞா் பலத்த காயம்: தப்பியோடியபோது விபரீதம்

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தின் 2-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் பலத்த காயமடைந்தாா். தப்பியோட முயன்றபோது அவா் கீழே விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். சென்னை வேளச்சேரி விஜயநகா் 7-ஆவது தெர... மேலும் பார்க்க

தேஜஸ், மன்னை, குருவாயூா் விரைவு ரயில்கள் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் காரணமாக, தேஜஸ், மன்னை, செந்தூா் உள்பட முக்கிய விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முதல் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயி... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: ஜூன் 21 முதல் பெறலாம்

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை ஜூன் 21 முதல் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மனைவி குறித்து அவதூறு: யூ-டியூபா் கைது

மனைவி குறித்து அவதூறு பரப்பியதாக யூ-டியூபா் கைது செய்யப்பட்டாா். சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீ விஷ்ணுகுமாா். யூ-டியூபரான இவா், தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய நிா்வாகியாகவும் உள்ளாா... மேலும் பார்க்க