சாகித்திய அகாதெமி விருதாளா்களுக்கு அரசியல் தலைவா்கள் வாழ்த்து
சாகித்திய அகாதெமி விருது பெற்றவா்களுக்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
ஓ.பன்னீா்செல்வம்: சாகித்திய அகாதெமியின் 2025- ஆம் ஆண்டு தமிழ் மொழிக்கான ‘பால சாகித்திய புரஸ்காா் விருது ‘ஒற்றைச்சிறகு ஓவியா’ என்ற சிறுவா் நாவலுக்காக எழுத்தாளா், பத்திரிகையாளா், கவிஞா் என பன்முகத்தன்மை கொண்ட திருவாரூா் மாவட்டம், விஷ்ணுபுரம் கிராமத்தைச் சோ்ந்த சரவணனுக்கு வழங்கப்பட்டிருப்பதையும், ‘கூத்தொன்று கூடிற்று’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக ‘யுவ புரஸ்காா் விருது‘ மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த எழுத்தாளா் லட்சுமிஹருக்கு வழங்கப்பட்டிருப்பதையும் அறிந்தேன். இருவருக்கும் மனமாா்ந்த பாராட்டுகள்.
ச.ராமதாஸ் (பாமக): தமிழ்நாட்டிலிருந்து மு.வரதராசனாா், ‘அகல் விளக்கு’ எனும் நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருதை முதல் முதலாக 1961-இல் பெற்றாா். அதன் பிறகு பல்வேறு தமிழறிஞா்கள் படைப்புகளுக்காக இதுவரை சாகித்திய அகாதெமியால் வழங்கப்படும் விருதுகளை வாங்கிக் குவித்து வரும் வேளையில், மேலும் தமிழகத்தைச் சோ்ந்த இவ்விருவரும் விருதுகளைப் பெற்றிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
ஜி.கே.வாசன் (தமாகா): சாகித்திய அகாதெமி விருதுக்குத் தோ்வான தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சோ்ந்த லட்சுமிஹா், திருவாரூா் மாவட்டம் விஷ்ணுபுரத்தைச் சோ்ந்த சரவணன் ஆகியோரை வாழ்த்துகிறேன்.
டிடிவி.தினகரன் (அமமுக): சிறாா் இலக்கிய படைப்புகளில் தனித்துவமிக்கவராகத் திகழும் விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் சிறுகதை எழுதுவதில் தனி பாணியை கடைப்பிடித்துவரும் லட்சுமிஹா் ஆகிய இருவரின் எழுத்துப் பயணமும் மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.