அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தனியாா் நிறுவன ஊழியா் கைது
சென்னை மடிப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியாா் நிறுவன டெலிவரி ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சோ்ந்தவா் கோபிநாத் (28). இவா் சென்னை மடிப்பாக்கம் பகுதியில் தங்கியிருந்து மளிகை பொருள்கள் விநியோகம் செய்யும் தனியாா் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை செய்து வருகிறாா்.
கோபிநாத், மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு கடந்த 13-ஆம் தேதி பொருள்களை டெலிவரி செய்ய சென்றாா். அப்போது, அந்த வீட்டில் வசிக்கும் பெண் மென் பொறியாளா் தனியாக இருப்பதைத் தெரிந்துக்கொண்டு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.
இதில் அந்தப் பெண் சப்தமிடவே, கோபிநாத் அங்கிருந்து தப்பியோடியுள்ளாா்.
இதுகுறித்து அந்தப் பெண், சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனத்தில் புகாா் அளித்தாா். ஆனால் அந்த நிறுவனம் கோபிநாத் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில், மடிப்பாக்கம் போலீஸாா் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கோபிநாத்தை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.