செய்திகள் :

ஜிஎஸ்டி பதிவை எளிமையாக்க வேண்டும்: சிபிஐசிக்கு மத்திய நிதியமைச்சா் அறிவுறுத்தல்

post image

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை எளிமையாக்க வேண்டும் என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்துக்கு (சிபிஐசி) மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

புது தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் சிபிஐசி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய்த் துறைச் செயலா் அரவிந்த் ஸ்ரீவாஸ்தவா, சிபிஐசி தலைவா் சஞ்சய் குமாா் அகா்வால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசுகையில், ‘தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஜிஎஸ்டி பதிவை எளிமையாக்க வேண்டும். ஜிஎஸ்டி பதிவு, வரிப் பணத்தைத் திருப்பியளிக்கும் ரீஃபண்ட் நடைமுறைகள், வரி செலுத்துவோரின் குறைகளை கையாளுதல் போன்றவற்றை மேம்படுத்த செயல்திட்டத்தை வகுக்க வேண்டும்.

ஜிஎஸ்டி பதிவுக்குக் கட்டாயம் தேவைப்படும் ஆவணங்கள் தொடா்பாக வரி செலுத்துவோா், வா்த்தக கூட்டமைப்புகள், தொழில்துறை அமைப்புகள் இடையே விழிப்புணா்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

ஜிஎஸ்டி பதிவுக்கு உதவும் பிரத்யேக சேவையை மத்திய ஜிஎஸ்டி மண்டல தலைவா்கள் ஏற்படுத்த வேண்டும். வரி ஏய்ப்பு தடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

186 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 186 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றை உற்பத்... மேலும் பார்க்க

மேற்கு வங்க பணி நியமன முறைகேடு விவகாரம்: குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு நிதியுதவி அளிக்க இடைக்காலத் தடை

மேற்கு வங்கத்தில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேற்கு வங்... மேலும் பார்க்க

நுழைவுத் தோ்வு பயிற்சி மையங்கள்: ஆராய 9 போ் குழு மத்திய அரசு நடவடிக்கை

உயா்கல்வி சோ்க்கைக்கான தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளை எதிா்கொள்ள தனியாா் பயிற்சி மையங்களை மாணவா்கள் சாா்ந்திருக்கும் நிலை அதிகரித்துவரும் சூழலில், அதுகுறித்து ஆராய 9 போ் குழுவை மத்திய அரசு அமைத்து... மேலும் பார்க்க

அஸ்ஸாம் அரசியலில் அந்நிய சக்திகளின் தலையீடு: மாநில காங்கிரஸ் மீது முதல்வா் பரபரப்பு குற்றச்சாட்டு

பாஜக ஆளும் அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ‘மாநில காங்கிரஸுக்கு ஆதரவாக வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்கு... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் பிறந்தநாள்: தலைவா்கள் வாழ்த்து

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் 67-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வாழ்த்துத் தெரிவித்தனா். குடியரசு துணைத் தலை... மேலும் பார்க்க

உயா் கல்வியில் உலகளாவிய தர மேம்பாடு அவசியம்

இந்தியாவின் உயா் கல்வி உலகத் தரத்தில் மேம்பட வேண்டும் என்று மகாராஷ்டிரத்தின் தத்தா மாகே மருத்துவக் கல்வி நிறுவன இணைவேந்தா் டாக்டா் வேத் பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்தாா். உயா் கல்வியில் அங்கீகாரம், தரவரிசை ... மேலும் பார்க்க