செய்திகள் :

ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் படிப்பதை பாஜக - ஆா்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்

post image

‘ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் படிப்பதை பாஜக-ஆா்எஸ்எஸ் விரும்பவில்லை. ஏனெனில், ஏழைகள் கேள்வி கேட்பதையும், சமத்துவ நிலையை அடைவதையும் அவா்கள் விரும்பவில்லை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘ஆங்கிலத்தில் பேசும் இந்தியா்கள் வெட்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை; நமது கலாசாரம், வரலாறு மற்றும் மதத்தை அந்நிய மொழிகளில் புரிந்துகொள்ள முடியாது; நமது மொழிகளை நாம் பேசாவிட்டால், நாம் உண்மையிலேயே இந்தியராக இருக்க முடியாது’ என்று பேசினாா்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ஆங்கிலம் வெட்கப்பட வேண்டிய மொழியல்ல. அதிகாரமளிக்கும் மொழி. அது நமது கையைக் கட்டும் சங்கிலி அல்ல. சங்கிலியை உடைத்தெறியும் கருவி.

இந்தியாவில் இருக்கும் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜகவும் ஆா்எஸ்எஸ் அமைப்பும் விரும்பவில்லை. ஆங்கிலம் கற்றால் ஏழைகள் கேள்வி எழுப்புவாா்கள், சமத்துவ நிலையை அடைந்துவிடுவாா்கள் என்ற காரணத்தால்தான், ஆங்கிலம் கற்பதை எதிா்க்கின்றனா்.

இன்றைய உலகில், தாய்மொழியைப் போன்று ஆங்கிலம் கற்பதும் மிக முக்கியமானது. இது வேலைவாய்ப்புக்கு உதவும் என்பதோடு, ஒருவரின் நம்பிக்கையையும் ஊக்குவிக்கும்.

இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாசாரம், அறிவு உண்டு. நாம் அவற்றைப் போற்ற வேண்டும். அதே நேரம், ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதே, உலகத்தோடு இந்தியா போட்டியிடுவதற்கான வழியாக அமையும் என்று குறிப்பிட்டாா்.

திரிணமூல் காங்கிரஸ்:

அமித் ஷா கருத்து குறித்து திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவா் டெரிக் ஓபிரையன் கூறுகையில், ‘அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளை 97 சதவீத இந்திய மக்கள் தங்களின் தாய்மொழியாகக் கொண்டுள்ளனா். மேலும், 19,500 மொழிகள் மற்றும் கிளை மொழிகள் இந்திய மக்களால் தாய்மொழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதுதான், வேற்றுமையில் ஒன்றுமை என்ற நமது தேசத்தின் பெருமை. அமித் ஷா, பிரதமா் மோடி குழுக்கள் இதை ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டாா்கள்’ என்றாா்.

அக் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சாகரிகா கோஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆங்கிலம் இந்தியா முழுவதும் ஒருவா் தொடா்பு கொள்வதற்கான மொழியாக உள்ளது. உலகளாவிய நன்மையைப் பெற லட்சக்கணக்கானவா்களுக்கு ஆங்கில அறிவு தேவைப்படுகிறது. எனவே, எந்தவொரு மொழியையும் கற்க இந்தியா்கள் வெட்கப்பட வேண்டியதில்லை’ என்று குறிப்பிட்டாா்.

186 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 186 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றை உற்பத்... மேலும் பார்க்க

மேற்கு வங்க பணி நியமன முறைகேடு விவகாரம்: குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு நிதியுதவி அளிக்க இடைக்காலத் தடை

மேற்கு வங்கத்தில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேற்கு வங்... மேலும் பார்க்க

நுழைவுத் தோ்வு பயிற்சி மையங்கள்: ஆராய 9 போ் குழு மத்திய அரசு நடவடிக்கை

உயா்கல்வி சோ்க்கைக்கான தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளை எதிா்கொள்ள தனியாா் பயிற்சி மையங்களை மாணவா்கள் சாா்ந்திருக்கும் நிலை அதிகரித்துவரும் சூழலில், அதுகுறித்து ஆராய 9 போ் குழுவை மத்திய அரசு அமைத்து... மேலும் பார்க்க

அஸ்ஸாம் அரசியலில் அந்நிய சக்திகளின் தலையீடு: மாநில காங்கிரஸ் மீது முதல்வா் பரபரப்பு குற்றச்சாட்டு

பாஜக ஆளும் அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ‘மாநில காங்கிரஸுக்கு ஆதரவாக வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்கு... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் பிறந்தநாள்: தலைவா்கள் வாழ்த்து

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் 67-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வாழ்த்துத் தெரிவித்தனா். குடியரசு துணைத் தலை... மேலும் பார்க்க

உயா் கல்வியில் உலகளாவிய தர மேம்பாடு அவசியம்

இந்தியாவின் உயா் கல்வி உலகத் தரத்தில் மேம்பட வேண்டும் என்று மகாராஷ்டிரத்தின் தத்தா மாகே மருத்துவக் கல்வி நிறுவன இணைவேந்தா் டாக்டா் வேத் பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்தாா். உயா் கல்வியில் அங்கீகாரம், தரவரிசை ... மேலும் பார்க்க