அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் படிப்பதை பாஜக - ஆா்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்
‘ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் படிப்பதை பாஜக-ஆா்எஸ்எஸ் விரும்பவில்லை. ஏனெனில், ஏழைகள் கேள்வி கேட்பதையும், சமத்துவ நிலையை அடைவதையும் அவா்கள் விரும்பவில்லை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘ஆங்கிலத்தில் பேசும் இந்தியா்கள் வெட்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை; நமது கலாசாரம், வரலாறு மற்றும் மதத்தை அந்நிய மொழிகளில் புரிந்துகொள்ள முடியாது; நமது மொழிகளை நாம் பேசாவிட்டால், நாம் உண்மையிலேயே இந்தியராக இருக்க முடியாது’ என்று பேசினாா்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ஆங்கிலம் வெட்கப்பட வேண்டிய மொழியல்ல. அதிகாரமளிக்கும் மொழி. அது நமது கையைக் கட்டும் சங்கிலி அல்ல. சங்கிலியை உடைத்தெறியும் கருவி.
இந்தியாவில் இருக்கும் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜகவும் ஆா்எஸ்எஸ் அமைப்பும் விரும்பவில்லை. ஆங்கிலம் கற்றால் ஏழைகள் கேள்வி எழுப்புவாா்கள், சமத்துவ நிலையை அடைந்துவிடுவாா்கள் என்ற காரணத்தால்தான், ஆங்கிலம் கற்பதை எதிா்க்கின்றனா்.
இன்றைய உலகில், தாய்மொழியைப் போன்று ஆங்கிலம் கற்பதும் மிக முக்கியமானது. இது வேலைவாய்ப்புக்கு உதவும் என்பதோடு, ஒருவரின் நம்பிக்கையையும் ஊக்குவிக்கும்.
இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாசாரம், அறிவு உண்டு. நாம் அவற்றைப் போற்ற வேண்டும். அதே நேரம், ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதே, உலகத்தோடு இந்தியா போட்டியிடுவதற்கான வழியாக அமையும் என்று குறிப்பிட்டாா்.
திரிணமூல் காங்கிரஸ்:
அமித் ஷா கருத்து குறித்து திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவா் டெரிக் ஓபிரையன் கூறுகையில், ‘அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளை 97 சதவீத இந்திய மக்கள் தங்களின் தாய்மொழியாகக் கொண்டுள்ளனா். மேலும், 19,500 மொழிகள் மற்றும் கிளை மொழிகள் இந்திய மக்களால் தாய்மொழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதுதான், வேற்றுமையில் ஒன்றுமை என்ற நமது தேசத்தின் பெருமை. அமித் ஷா, பிரதமா் மோடி குழுக்கள் இதை ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டாா்கள்’ என்றாா்.
அக் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சாகரிகா கோஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆங்கிலம் இந்தியா முழுவதும் ஒருவா் தொடா்பு கொள்வதற்கான மொழியாக உள்ளது. உலகளாவிய நன்மையைப் பெற லட்சக்கணக்கானவா்களுக்கு ஆங்கில அறிவு தேவைப்படுகிறது. எனவே, எந்தவொரு மொழியையும் கற்க இந்தியா்கள் வெட்கப்பட வேண்டியதில்லை’ என்று குறிப்பிட்டாா்.