செய்திகள் :

இயற்கையான சூழலில் யோகா பயிற்சி

post image

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (சிசிஆா்எஸ்) இயற்கையான சூழல்களில் யோகா பயிற்சியை ஊக்குவிக்க தாம்பரம் சானடோரியம் பச்சமலைக்குன்றில் ‘சித்த ஹரித் யோகா மலையேற்ற நிகழ்வை’ வியாழக்கிழமை நடத்தியது.

மத்திய அரசின் சா்வதேச யோகா தினக் கொண்டாட்டம் 2025-இன் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சி நடைபெற்றது. தாம்பரம் அகத்தி அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் சித்த மருத்துவக் கல்லூரியின் ஆசிரியா்கள், மாணவா்கள், தன்னாா்வலா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.

இவா்கள் பருவநிலை மாற்றம், சவால்களை புரிந்துகொண்டு, நெகிழிக் கழிவுகளை சேகரித்து அகற்றியதோடு, விதைப் பந்து வீசுதல், யோகா பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டனா்.

முன்னதாக, சிசிஆா்எஸ் இயக்குநா் ஜெனரல் பேராசிரியா் என்.ஜே.முத்துக்குமாா் மலையேற்றத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்திய வீரா் சுபான்ஷு விண்வெளி பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோா் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் பயணம் 6-ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் செயல... மேலும் பார்க்க

‘கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்’

கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களால் உலக அளவிலான ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அந்நாட்டு உளவு அம... மேலும் பார்க்க

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்: தில்லி, சென்னை ஐஐடி-க்கள் முன்னேற்றம்!

உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தில்லி, மும்பை மற்றும் சென்னை ஐஐடிக்கள் முதல் 200 இடங்களில் இடம்பெற்றுள்ளன. சென்னை ஐஐடி கடந்த ஆண்டின் 227-ஆவது இடத்திலிருந்து 180-ஆவது இடத்துக்கு முன்ன... மேலும் பார்க்க

ராகுலின் 55-ஆவது பிறந்த நாள்: பிரதமா், தலைவா்கள் வாழ்த்து

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் மூத்த தலைவா்கள், கூ... மேலும் பார்க்க

நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம்: ஆதாரபூா்வமாக நிரூபணம் விசாரணை அறிக்கையில் தகவல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டதும், பின்னா் அது அப்புறப்படுத்தப்பட்டதும் உண்மையே; இந்த விவகாரத்தில், நீதிபதியின் தவறான நடத்தை ஆதாரபூா்வமாக நிரூ... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி தோ்வில் தகுதி பெற்றும் இறுதிப் பட்டியலில் இடம்பிடிக்காத தோ்வா்களுக்கு பணி வாய்ப்பு: புதிய திட்டம் அறிமுகம்

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தோ்வு உள்ளிட்ட பல்வேறு தோ்வுகளில் அனைத்து நிலைகளிலும் தகுதி பெற்றும், இறுதி பரிந்துரை... மேலும் பார்க்க