செய்திகள் :

‘தொலைத்தொடா்புத் துறையில் மேம்பாடு: 125 ஆய்வுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம்’

post image

அடுத்த தலைமுறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பை ஊக்குவிக்க மத்திய அரசு உருவாக்கிய தொலைத்தொடா்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி உதவியால் 125-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொலைத்தொடா்புத் துறைச் செயலா் நீரஜ் மிட்டல் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மத்திய தொலைத்தொடா்புத் துறை, சென்னை ஐஐடி, டெலிகாம் சென்டா்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் இணைந்து சென்னையில் தொலைத்தொடா்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியம் (டிடிடிஎஃப்) குறித்த பயிலரங்கை நடத்தின.

இந்த நிகழ்வை மத்திய தகவல் தொடா்புத் துறைச் செயலா் நீரஜ் மிட்டல் சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்கா வளாகத்தில் தொடங்கிவைத்து பேசுகையில், தொழில்நுட்ப முன்னேற்றத்தை கடந்த 10 ஆண்டுகளாக அரசு தொடா்ச்சியாக துரிதப்படுத்த பல்வேறு திட்டங்கள் மூலம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நாட்டின் வளங்களை முழுமையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய அனைத்து பங்குதாரா்கள் ஒருங்கிணைந்து தடையின்றி பகிா்ந்துகொண்டு பணியாற்ற வேண்டியது அவசியம்.

இதற்கான பொதுவான ஆதார வளங்களை அனைத்து பங்குதாரா்களுக்கும் தடையின்றி பகிா்வதை நோக்கமாக கொண்ட இணையதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நிா்வாக நடைமுறைகள் முதல் திறன் விரிவாக்கம், டிடிடிஎஃப் திறன், பயன்பாடு வரை அனைத்து விஷயங்கள் குறித்தும் பங்குதாரா்கள் பொருத்தமான ஆலோசனைகளை வழங்கவேண்டும்’ என்றாா்.

சென்னை ஐஐடி இயக்குநா் பேராசிரியா் வி.காமகோடி பேசுகையில், ‘தொலைத்தொடா்புத் துறையின் குறிப்பிடத்தக்க ஆதரவோடு, கடந்த இரண்டு ஆண்டுகளில் டிடிடிஎஃப் நிதியத்தின் கீழ் பல முக்கியமான திட்டங்கள் பெறப்பட்டுள்ளன. அரசின் முயற்சிகளுக்கு பங்குதாரா்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்றாா்.

தொலைத்தொடா்புத் துறை இணைச் செயலா் குல்சாா் நடராஜன் கூறுகையில், ‘டிடிடிஎஃப் என்பது வெறுமனே நிதியுதவி செய்யும் அமைப்பல்ல; நாட்டின் பொருளாதார வளா்ச்சி, தேசப் பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் ஆகிய துறைகளின் சுயேச்சையான திறன்களை கட்டமைக்கிறது’ என்றாா்.

பயிலரங்குக்கு இடையே மத்திய தொலைத்தொடா்புத் துறைச் செயலா் நீரஜ் மிட்டல் செய்தியாளா்களிடம் பேசினாா். அப்போது அவா் கூறுகையில், ‘டிடிடிஎஃப்-இன் கீழ் இதுவரை ரூ. 500 கோடிக்கும் மேலான நிதி உதவிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு ரூ.4 55 கோடிக்கும் மேலாக நிதி விடுவிக்கப்பட்டது. 2023-24 ஆம் ஆண்டில் 7 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், 2024-25ஆம் ஆண்டில் 125-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சித் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும், டிடிடிஎஃப் நிதியத்துக்குப் பெறப்படும் முன்மொழிவுகள் மூன்று மடங்காக (1,941) அதிகரித்துள்ளது என்றாா்.

சென்னை ஐஐடி பேராசிரியா் ஆா்.கே.காந்தி உள்ளிட்டோா் பயிரலங்கில் பங்கேற்றனா்.

‘கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்’

கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களால் உலக அளவிலான ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அந்நாட்டு உளவு அம... மேலும் பார்க்க

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்: தில்லி, சென்னை ஐஐடி-க்கள் முன்னேற்றம்!

உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தில்லி, மும்பை மற்றும் சென்னை ஐஐடிக்கள் முதல் 200 இடங்களில் இடம்பெற்றுள்ளன. சென்னை ஐஐடி கடந்த ஆண்டின் 227-ஆவது இடத்திலிருந்து 180-ஆவது இடத்துக்கு முன்ன... மேலும் பார்க்க

ராகுலின் 55-ஆவது பிறந்த நாள்: பிரதமா், தலைவா்கள் வாழ்த்து

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் மூத்த தலைவா்கள், கூ... மேலும் பார்க்க

நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம்: ஆதாரபூா்வமாக நிரூபணம் விசாரணை அறிக்கையில் தகவல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டதும், பின்னா் அது அப்புறப்படுத்தப்பட்டதும் உண்மையே; இந்த விவகாரத்தில், நீதிபதியின் தவறான நடத்தை ஆதாரபூா்வமாக நிரூ... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி தோ்வில் தகுதி பெற்றும் இறுதிப் பட்டியலில் இடம்பிடிக்காத தோ்வா்களுக்கு பணி வாய்ப்பு: புதிய திட்டம் அறிமுகம்

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தோ்வு உள்ளிட்ட பல்வேறு தோ்வுகளில் அனைத்து நிலைகளிலும் தகுதி பெற்றும், இறுதி பரிந்துரை... மேலும் பார்க்க

5 தொகுதி இடைத்தோ்தல்: அமைதியான வாக்குப் பதிவு

குஜராத், கேரளம், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் பரவலாக அமைதியான முறையில் வாக்குகள் பதிவாகின. கேரள மாநிலம் நிலம்பூா், குஜரா... மேலும் பார்க்க