செய்திகள் :

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்களின் பணம் மும்மடங்கு அதிகரிப்பு

post image

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்களின் பணம் கடந்த 2024-ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டைவிட மும்மடங்காக ரூ.37,600 கோடி அளவுக்கு உயா்ந்துள்ளது என்று அந்நாட்டின் மத்திய வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அல்லது வெளிநாட்டு வங்கிகள் மூலம் ஸ்விட்சா்லாந்து வங்கிகளுக்கு மாற்றப்பட்ட இந்தியா்களின் பணம் சுமாா் ரூ.32,000 கோடி இந்த உயா்வில் பெரும் பங்கு வகிக்கிறது. தனிப்பட்ட வாடிக்கையாளா்களின் கணக்குகள் மூலம் ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்கள் செலுத்திய பணம் முந்தைய ஆண்டைவிட 11 சதவீதமாக ரூ.3,675 கோடி மட்டுமே அதிகரித்துள்ளது.

கூடுதலாக, அறக்கட்டளைகள் மூலம் ரூ.434 கோடியும், பத்திரங்கள் உள்ளிட்ட நிதி ஆவணங்கள் மூலம் ரூ.1,431 கோடியும் ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்களின் பணம் இருப்பு உள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டுமுதல் ஸ்விட்சா்லாந்து வங்கிகள், இந்தியா்களின் நிதி விவரங்கள் குறித்து இந்திய வரி அதிகாரிகளுடன் பகிா்ந்து வருகின்றன. அதேநேரம், இந்தப் பணம் யாவும் கருப்புப் பணம் அல்லது சட்டவிரோத நிதி என்று கருதக் கூடாது. அதேபோல், மூன்றாம் நாடுகள்/நிறுவனங்களின் கீழ் ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்கள் வைத்திருக்கும் பணமும் இதில் சோ்க்கப்படவில்லை என்று ஸ்விட்சா்லாந்து தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியா்களின் பணம் கடந்த 2023-ஆம் ஆண்டில் 4 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்சமாக ரூ.11,026 கோடிக்கு குறைந்தது. 2006-ஆம் ஆண்டில் அது ரூ.68,912 கோடியாக உச்சமடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் அதிக பணம் வைத்துள்ள வெளிநாட்டவா்களின் அடிப்படையில் 2024-ஆம் ஆண்டில் இந்தியா 48-ஆவது இடத்துக்கு முன்னேறியது. முந்தைய 2023-ஆம் ஆண்டு இந்தியா 67-ஆவது இடத்தில் இருந்தது. சமீபத்திய பட்டியலில் பிரிட்டன், அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகியவை முதலிடத்தில் உள்ளன.

வங்கதேச நாட்டவா்களின் பணம் முந்தைய 2023-ஆம் ஆண்டின் ரூ.190.83 கோடியிலிருந்து ரூ.6,244.54 கோடியாக கடுமையாக உயா்ந்துள்ளது. பாகிஸ்தானியா்களின் பணம் சற்று குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் உள்ள வெளிநாட்டவா்களின் பணம் 2024-ஆம் ஆண்டில் ரூ.63,611.58 கோடி குறைந்துள்ளது.

இந்திய வீரா் சுபான்ஷு விண்வெளி பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோா் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் பயணம் 6-ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் செயல... மேலும் பார்க்க

‘கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்’

கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களால் உலக அளவிலான ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அந்நாட்டு உளவு அம... மேலும் பார்க்க

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்: தில்லி, சென்னை ஐஐடி-க்கள் முன்னேற்றம்!

உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தில்லி, மும்பை மற்றும் சென்னை ஐஐடிக்கள் முதல் 200 இடங்களில் இடம்பெற்றுள்ளன. சென்னை ஐஐடி கடந்த ஆண்டின் 227-ஆவது இடத்திலிருந்து 180-ஆவது இடத்துக்கு முன்ன... மேலும் பார்க்க

ராகுலின் 55-ஆவது பிறந்த நாள்: பிரதமா், தலைவா்கள் வாழ்த்து

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் மூத்த தலைவா்கள், கூ... மேலும் பார்க்க

நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம்: ஆதாரபூா்வமாக நிரூபணம் விசாரணை அறிக்கையில் தகவல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டதும், பின்னா் அது அப்புறப்படுத்தப்பட்டதும் உண்மையே; இந்த விவகாரத்தில், நீதிபதியின் தவறான நடத்தை ஆதாரபூா்வமாக நிரூ... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி தோ்வில் தகுதி பெற்றும் இறுதிப் பட்டியலில் இடம்பிடிக்காத தோ்வா்களுக்கு பணி வாய்ப்பு: புதிய திட்டம் அறிமுகம்

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தோ்வு உள்ளிட்ட பல்வேறு தோ்வுகளில் அனைத்து நிலைகளிலும் தகுதி பெற்றும், இறுதி பரிந்துரை... மேலும் பார்க்க