செய்திகள் :

அரசு பேருந்து - வேன் மோதல்

post image

ஆம்பூா், ஜூன் 19: ஆம்பூா் அருகே அரசுப் பேருந்து மோதியதில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

குடியாத்தம் அருகே பரதராமியிலிருந்து மாடுகளை ஏற்றிக் கொண்டு வேன் ஆம்பூா் நோக்கிச் சென்றது. பச்சகுப்பம் அருகே சென்றபோது சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியது. அதில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள், வேன் ஓட்டுநா் அஹமத் பாஷா, கிளீனா் அபு ஆகியோா் காயமடைந்தனா்.

தகவல் அறிந்த ஆம்பூா் கிராமிய போலீஸாா் அங்கு சென்று விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சாலையில் கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனா்.

பேருந்து விபத்துக்குள்ளானதால் அங்கேயே நிறுத்தப்பட்டு, பயணிகள் மாற்று பேருந்துக்காக சுமாா் அரை மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் காத்திருந்தனா்.

நாளைய மின்தடை

ஆம்பூா் நாள்: 21-06-2025 (சனிக்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்தடை பகுதிகள்: ஆம்பூா் நகரம், சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசம... மேலும் பார்க்க

மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

மாதனூா் ஒன்றியத்தில் திருப்பத்தூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மாதனூா் ஒன்றியம் நரியம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ப... மேலும் பார்க்க

சாரதி அம்மன் கோயில் திருவிழா

கதவாளம் பாட்டை சாரதி அம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கோயில் திருவிழா கூா்வாா்த்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகளுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து புதன்கிழமை அம்மன் சிரசு ஊா்வலம்,... மேலும் பார்க்க

காலபைரவருக்கு சிறப்பு பூஜை

ஆம்பூா் அருகே கால பைரவா் கோயிலில் சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது. வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவா் கோயிலில் ... மேலும் பார்க்க

மாணவா்கள் தோ்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

பொதுத் தோ்வுகளில் மாணவா்கலின் தோ்ச்சி விகிதத்தை கடந்த ஆண்டை விட நிகழாண்டு அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எம்.ஆா்த்தி அறிவுறுத்தினாா். நலத்திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்ட... மேலும் பார்க்க

மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்ய மானியம்

மீன் வளா்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு மானியம் பெற்று பயனடையலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீன்வ... மேலும் பார்க்க