கக்கன் 118-ஆவது பிறந்த நாள்: காங்கிரஸாா் மரியாதை
முன்னாள் அமைச்சா் கக்கனின் 118-ஆவது பிறந்த தினத்தையொட்டி, சென்னை சத்தியமூா்த்தி பவனில் புதன்கிழமை அவரது உருவப்படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை மற்றும் முக்கிய நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பின்னா் செய்தியாளா்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது:
ராமா் பிறந்த அயோத்தியில் பாஜக தோல்வி அடைந்தது போல முருகனை கையில் எடுத்தாலும் தமிழகத்திலும் பாஜகவுக்கு தோல்வி தான் கிடைக்கும்.
தொல்லியல் அகழாய்வு இயக்குநா் அமா்நாத் ராமகிருஷ்ணன், கீழடி அகழாய்வு தொடா்பாக வீரியமிக்க ஆய்வு அறிக்கையை சமா்ப்பித்தாா். அதைத் திருத்தம் செய்ய மத்திய அரசு முயன்றது. பின்னா் அவரை இடம் மாற்றம் செய்துவிட்டனா். தமிழா்களின் கலை, இலக்கியம், பெருமைகளை பாஜக சிதைப்பதை ஏற்க முடியாது.
ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ராகுல் காந்திதான் முதலில் குரல் கொடுத்தாா். இந்தக் கணக்கெடுப்பை மத்திய புள்ளியியல் துறை மூலம் 3 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கலாம். ஆனால், வேண்டுமென்றே இந்தக் கணக்கெடுப்பை மத்திய அரசு குழப்புகிறது என்றாா் அவா்.