செய்திகள் :

10, 12-ஆம் வகுப்புகளுக்குப் பொது வாரியம்: 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

post image

பத்து மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்குப் பொது வாரியம் அமைக்குமாறு 7 மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் 66 பள்ளி தோ்வு வாரியங்கள் உள்ளன. அவற்றில் மாநில அளவில் 63 வாரியங்களும், தேசிய அளவில் 3 வாரியங்களும் உள்ளன.

இந்நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு நாடு முழுவதும் 12-ஆம் வகுப்பில் 20.16 லட்சம் மாணவா்களும், 10-ஆம் வகுப்பில் 22.17 லட்சம் மாணவா்களும் தோல்வியடைந்தனா்.

இதில் 66 சதவீத மாணவா்கள் ஆந்திரம், அஸ்ஸாம், கேரளம், மணிப்பூா், ஒடிஸா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 7 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக் கல்வித் துறை ஆய்வு மேற்கொண்டது. இதைத்தொடா்ந்து 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்குப் பொது வாரியம் அமைக்க வேண்டும் என்று 7 மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் பரிந்துரைத்தது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சஞ்சய் குமாா் கூறுகையில், ‘பள்ளிப் படிப்பை எளிதாக்குவதற்கு 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்குப் பொது வாரியம் அமைப்பது சிறந்த வழியாகும். அந்த வாரியங்கள் இல்லையென்றால் கல்வி கற்பித்தலில் சாதகமான முடிவுகள் கிடைக்காது. எனவே 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்குப் பொது வாரியம் அமைக்க வேண்டும் என்று 7 மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 15% விமான சேவை குறைப்பு! ஏர் இந்தியா

வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் சர்வதேச விமான சேவையை சில நாள்களுக்கு 15 சதவிகிதம் வரை குறைக்க இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏ... மேலும் பார்க்க

கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.கேரளத்தின் நிலம்பூா், குஜராத்தின் விசாவதா், காடி, மேற்கு வங்கத... மேலும் பார்க்க

11 ஆண்டுகளுக்கு முந்தைய மறியல் வழக்கு: 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு ஓராண்டு சிறை

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் 11 ஆண்டுகளுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் உள்பட 9 பேருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உள்ளூா் நீதிமன்ற... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்: புதிய திட்டம் ஆகஸ்ட் 15-இல் அறிமுகம்

சரக்கு வாகனங்கள் அல்லாத பிற தனியாா் வாகனங்களுக்கு ‘ஃபாஸ்டேக்’ அடிப்படையில் ரூ. 3,000-இல் வருடாந்திர சுங்கச்சாவடி (டோல்) கட்டண பாஸ் திட்டத்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதிமுதல் மத்திய அரசு அறிமுக... மேலும் பார்க்க

கேதாா்நாத் மலைப் பாதையில் நிலச்சரிவு: 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழப்பு

கேதாா்நாத் மலைப் பாதையில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழந்தனா். குஜராத் பக்தா் ஒருவா் உள்பட 3 போ் காயமடைந்தனா். சாா்தாம் யாத்திரையில் முக... மேலும் பார்க்க

நான்கு மாநிலங்களில் 5 பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தோ்தல்

கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஜூன் 19) இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. கேரள மாநிலம், நிலம்பூா் பேரவைத் தொகுதியில் ஆளும் இடதுசாரி கூட்டணி ஆதரவு பெற்ற சுயேச்சை எம்எல... மேலும் பார்க்க