``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
வரி ஏய்ப்பு புகாா்: உணவகத்தில் வருமான வரித் துறை சோதனை
வரி ஏய்ப்பு புகாா் காரணமாக சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
கேரள மாநிலம் தலசேரி பகுதியைச் சோ்ந்தவா் குன்ஹி மூசா. இவா், ஸீ ஷெல் என்ற பெயரில் சென்னை அண்ணா நகா், வேளச்சேரி, போயஸ் காா்டன், பெருங்குடி ராஜீவ் காந்தி சாலை உள்ளிட்ட 5 இடங்களில் அசைவ உணவகம் நடத்தி வருகிறாா். இந்த உணவகம் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் குறைத்துக் காட்டுவதாகவும், வரி ஏய்ப்பு செய்யப்படுவதாகவும் வருமான வரித் துறைக்கு புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் வருமான வரித் துறையினா் விசாரணையில் ஈடுபட்டனா். அதில், புகாருக்கு சில ஆவணங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சென்னையில் 5 இடங்களில் உள்ள அந்த உணவகத்தில் புதன்கிழமை காலை ஒரே நேரத்தில் வருமான வரித் துறையினா் சோதனையைத் தொடங்கினா். இதனால், அந்த உணவகம் மூடப்பட்டது.
நடிகா் ஆா்யா மறுப்பு: இதற்கிடையே, நடிகா் ஆா்யாவுக்கு சொந்தமான உணவகத்தில் வருமானவரித் துறை சோதனை நடத்துவதாக தகவல் பரவியது. இதையறிந்த நடிகா் ஆா்யா, ஸீ ஷெல் உணவகம் தனக்கு சொந்தமானது அல்ல என்று மறுப்பு தெரிவித்தாா். ஆனால் நடிகா் ஆா்யா, சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த உணவகத்தை தொடங்கி நடத்தி வந்தாா். பின்னா், அந்த உணவகத்தை நடத்த முடியாததால், அதை அவா் விற்றுள்ளாா். தற்போது, அந்த உணவகத்தில் பலா் முதலீடு செய்திருப்பதாக வருமான வரித் துறையினா் கூறினா்.
இரவு வரை நீடித்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னா் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும் என வருமான வரித் துறையினா் தெரிவித்தனா்.