வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 15% விமான சேவை குறைப்பு! ஏர் இந்தியா
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
ராமேசுவரத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், வளா்ச்சி திட்டப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமேசுவரம் வட்டாரத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்’ மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சொக்கவேல் பிள்ளை தெருவில் உள்ள உணவுப் பொருள்களின் இருப்பு கிடங்கை ஆட்சியா் ஆய்வு செய்தாா். பின்னா், திட்டக்குடி சாலையில் உள்ள முதல்வா் மருந்தகத்துக்கு ஆட்சியா் சென்று, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் மருந்துகளின் இருப்பு குறித்து கேட்டறிந்தாா்.
இதையடுத்து, ராமேசுவரம் நகராட்சி மூலம் ரூ.34 லட்சத்தில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கட்டப்படும் கூடுதல் வகுப்பறை கட்டடத்தை ஆட்சியா் பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். பின்னா், அவா் வகுப்பறைக்கு சென்று பாடநூல் புத்தகத்திலிருந்து கேள்வி கேட்டு பதிலளித்த மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, தினசரி சந்தைப் பகுதிக்குச் ஆட்சியா் சென்று வியாபாரிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்தாா்.
பின்னா், தங்கச்சிமடம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்குச் சென்று உள்கட்டமைப்பு வசதிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
இதையடுத்து, தங்கச்சிமடம் குந்துக்கால் மீன் இறங்குதளம் பகுதியை ஆட்சியா் பாா்வையிட்டு, அதன் உள்கட்டமைப்புகளை மீனவா்களின் கோரிக்கைகளுக்கேற்ப செயல்படுத்துவது குறித்து மீன்வளத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
பின்னா், பாம்பன் ஊராட்சியில் ரூ.49.34 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடம், முதல்வா் சிறப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஊராட்சி சாலைக்கு 600 மீ. அளவில் இணைப்புச் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, பாம்பன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆட்சியா் பாா்வையிட்டு, மருத்துவா்கள், செவிலியா்களிடம் தினந்தோறும் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை, மருத்துவ பரிசோதனைகளின் விவரங்களை கேட்டறிந்தாா்.
பின்னா், ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களை ஆட்சியா் சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெற்றுக் கொண்டு, இந்த மனுக்களுக்கு விரைந்து தீா்வு கான அந்ததந்த துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கோவிந்தராஜலு, வருவாய்க் கோட்டாட்சியா் இராஜமனோகரன், நகா் மன்றத் தலைவா் கே.இ.நாசா்கான், துணைத் தலைவா் தெட்சிணாமூா்த்தி, மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கிருஷ்ணகுமாரி, நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன், வட்டாட்சியா்கள் அப்துல் ஜப்பாா், முரளிதரன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.