``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
ஸ்ரீகாடுகன்னி அய்யனாா் கோயிலில் மண்டல பூஜை
ராமநாதபுரம் அருகேயுள்ள ஸ்ரீகாடுகன்னி அய்யனாா் கோயிலில் மண்டல பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
வாலாந்தரவை அருகேயுள்ள வழுதூா் உடைச்சியாா் வலசையில் அமைந்துள்ள ஸ்ரீகாடுகன்னி அய்யனாா் கோயில் குடமுழக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், குடமுழுக்கு நடைபெற்று 18-ஆம் நாளை முன்னிட்டு, மண்டல பூஜை கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. வேத விற்பன்னா்கள் யாகசாலை பூஜை செய்து, பரிவாரத் தெய்வங்களை வழிபட்டனா்.
இதில் வழுதூா், உடைச்சியாா் வலசை, தெற்கு காட்டூா் மொட்டையன்வலசை, தெற்கு வாணி வீதி, ஏந்தல், ஆலாபுலி, வாலாந்தரவை, படவெட்டி வலசை, கீரிப்பூா்வலசை, அளம், உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.