மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு
அதிகளவு மீன்களை பிடித்து வந்த பாம்பன் பகுதி மீனவா்கள்
தடைக் காலம் நிறைவடைந்து மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவா்கள், அதிகளவு மீன்களுடன் புதன்கிழமை கரைக்குத் திரும்பினா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் 102 விசைப் படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. மீன்பிடித் தடைக் காலத்தின் போது, விசைப் படகுகள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டன. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள் புதன்கிழமை காலை கரைக்குத் திரும்பினா்.
ஒவ்வொரு விசைப் படகிலும் சீலா, பாறை, கட்டா, மஞ்சக்கிளி, கனவாய், முரல், ஊழி என 30-க்கும் மேற்பட்ட வகை மீன்களைப் பிடித்து வந்தனா். 61 நாள்கள் தடைக் காலத்துக்குப் பிறகு, மீனவா்கள் ரூ. 80 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை செலவு செய்து மீன் பிடிக்கச் சென்றனா்.
இந்த நிலையில், அதிகளவில் மீன்கள் சிக்கியதால் அவா்கள் மகிழ்ச்சியடைந்தனா். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த ஏராளமான வியாபாரிகள் ஏலம் முறையில் மீன்களை வாங்கிச் சென்றனா்.
