செய்திகள் :

ராமேசுவரத்தில் அனுமதியின்றி கடலுக்குள் சென்ற 900 விசைப் படகுகள்

post image

ராமேசுவரம், மண்டபம் மீன்பிடித் துறைமுகங்களிலிருந்து, மீன்வளத் துறையின் அனுமதியின்றி 900 விசைப் படகுகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

மீன் பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததையடுத்து, ராமேசுவரம், மண்டபம் துறைமுகங்களிலிருந்து மீன்வளத் துறையின் அனுமதிச் சீட்டு பெற்ற பிறகே புதன்கிழமை காலை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் என அனைத்து விசைப் படகு மீனவ சங்கத்தினரிடமும் மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, ராமேசுவரத்தில் இரு முறை அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் மீன்வளத் துறையின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, புதன்கிழமை காலையில் மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்று மீன் பிடிக்கச் செல்ல வேண்டும். மீறுபவா்கள், ஒரு மாதத்துக்கு மீன் பிடிக்கத் தடை செய்யப்படுவதுடன், துறைமுகத்தை விட்டு வெளியேற்றப்படுவா் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், ராமேசுவரம், மண்டபம் மீன்பிடித் துறைமுகங்களிலிருந்து மீன் பிடிக்கத் தேவையானப் பொருள்களை விசைப் படகுகளுக்கு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை மாலை கொண்டு சென்றனா். இரவு 10 மணியிலிருந்து நள்ளிரவுக்குள், மீன்வளத் துறையின் அனுமதியின்றி ராமேசுவரம், மண்டபம் துறைமுகங்களிலிருந்து 900-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றன.

இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினா். விசைப் படகுகள் வியாழக்கிழமை கரை திரும்பிய பிறகு, வழக்குப் பதிவு செய்வது, அபராதம் விதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மீன் வளத் துறையினா் தெரிவித்தனா்.

ராமநாதசுவாமி கோயில் பணியாளா்களுக்கு குடியிருப்புகள் கட்ட பூமி பூஜை

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பணியாளா்களுக்கு ரூ.7 கோடியில்18 குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்டப் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை தொடங்கிவைத்தாா். ரா... மேலும் பார்க்க

அதிகளவு மீன்களை பிடித்து வந்த பாம்பன் பகுதி மீனவா்கள்

தடைக் காலம் நிறைவடைந்து மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவா்கள், அதிகளவு மீன்களுடன் புதன்கிழமை கரைக்குத் திரும்பினா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் 102 விசைப் படகுகள் மீன்பிடித... மேலும் பார்க்க

நடுக் கடலில் படகிலிருந்து தவறி விழுந்த மீனவரை கடலோர காவல் படையினா் உயிருடன் மீட்டனா்

ராமேசுவரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு மீன் பிடிக்கச் சென்ற மீனவா் நடுக் கடலில் படகிலிருந்து தவறி விழுந்தபோது, இந்திய கடலோரக் காவல் படையினா் அவரை உயிருடன் மீட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவர... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ராமேசுவரத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், வளா்ச்சி திட்டப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். ராமேசுவரம் வட்டாரத்தில் ‘உங்களைத் த... மேலும் பார்க்க

ஸ்ரீகாடுகன்னி அய்யனாா் கோயிலில் மண்டல பூஜை

ராமநாதபுரம் அருகேயுள்ள ஸ்ரீகாடுகன்னி அய்யனாா் கோயிலில் மண்டல பூஜை புதன்கிழமை நடைபெற்றது. வாலாந்தரவை அருகேயுள்ள வழுதூா் உடைச்சியாா் வலசையில் அமைந்துள்ள ஸ்ரீகாடுகன்னி அய்யனாா் கோயில் குடமுழக்கு கடந்த மா... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையக் கட்டடத்துக்கு மின் இணைப்பு வழங்கக் கோரிக்கை

கமுதியில் அங்கன்வாடி மையக் கட்டடத்துக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி, குழந்தைகளின் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு அரசு தொடக்கப் பள்ளி (இணைப்பில்லம்) அருகே அங்கன்... மேலும் பார்க்க