செய்திகள் :

மெட்ரோ விபத்து: 4 பொறியாளர்கள் பணிநீக்கம்! எல்&டி-க்கு ரூ. 1 கோடி அபராதம்!

post image

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக 4 பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 12 ஆம் தேதி இரவு, ராமாபுரத்தில் உள்ள டி.எல்.எஃப். தொழில்நுட்பப் பூங்கா மற்றும் எல்&டி நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது, இரு தூண்களுக்கு இடையே அமைக்கப்படும் ராட்சத கிர்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் (43) என்பவர் உயிரிழந்தார்.

சென்னையின் பல்வேறு இடங்களில் சில ஆண்டுகளாக மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. அவ்வாறு இருக்க மெட்ரோ பணியால் ஒருவர் உயிரிழந்தது மக்களிடையே அதிகம் விமர்சிக்கப்பட்டது.

இந்த விபத்தில் உயிரிழந்த ரமேஷின் குடும்பத்தினருக்கு மெட்ரோ நிர்வாகம் ரூ. 5 லட்சமும் கட்டுமானப் பணி ஒப்பந்ததாரரான எல்&டி நிறுவனம் ரூ. 20 லட்சம் இழப்பீடும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்ட மெட்ரோ ரயில் நிர்வாகம், பணியின்போது அலட்சியமாக இருந்த 4 பொறியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

மேலும் ஒப்பந்த நிறுவனமான எல்&டி நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு என்றாலே தொழில் வளர்ச்சிதான்; 42% பெண் தொழிலாளர்கள் : முதல்வர் மு.க. ஸ்டாலின்

மருத்துவமனை அலுவலர்களுக்கு பணி நீட்டிப்பு கிடையாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எந்த ஒரு அரசு மருத்துவமனைகளிலும் அலுவலர்களுக்கு பணி நீட்டிப்பு என்பது கிடையாது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மருத்துவம் மற்றும் மக்கள் நல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஜூன் 21 வரை வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகத்தில் ஜூன் 21 வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 19, 20 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் கார... மேலும் பார்க்க

அரசு ஜீப் மீது பேருந்து மோதியதில் பெண் கோட்டாட்சியர் பலி!

திருச்சி அருகே அரசு ஜீப் மீது பேருந்து மோதிய விபத்தில் பெண் கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா பலியானார்.திருச்சி மாவட்டம் முசிறி வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஒ.) ஆராவமுத தேவசேனா பணியாற்றி வந்தார்.இந்நில... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று(ஜூன் 19) ஓரிரு இடங்களிலும், பு... மேலும் பார்க்க

நித்யானந்தா எங்கு உள்ளார்? நீதிமன்றம் கேள்வி

மதுரை: நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா நாடு எங்கிருக்கிறது? அங்கு எப்படிச் செல்வது? என மதுரை உயர் நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியிருக்கிறது.மதுரை ஆதீனத்துக்குள் நுழைவது தொடர்பான உத்தரவுக்கு எதிராக ந... மேலும் பார்க்க

அன்புமணி கூறுவது அப்பட்டமான பொய்: ராமதாஸ்

பாமகவில் ஏற்பட்டுள்ள குழுப்பத்துக்கு திமுகதான் காரணம் என அன்புமணி கூறுவது அப்பட்டமான கடைந்தெடுத்த பொய் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாமக கூட்டத்தில் பேசும்... மேலும் பார்க்க