செய்திகள் :

மனுக்களுக்கு 30 நாள்களில் பதில் அளிக்காவிட்டால் மாவட்ட ஆட்சியா்களுக்கு ரூ.25,000 அபராதம்: உயா்நீதிமன்றம்

post image

அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாள்களில் பதில் அளிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வில் புதன்கிழமை வழக்குகள் விசாரணையைத் தொடங்கும் முன்பு, வழக்குரைஞா் ஒருவா் முறையீடு ஒன்றை முன்வைத்தாா். அதில், அரசுக்கு அளித்த மனுக்களை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

அப்போது தலைமை நீதிபதி கே.ஆா். ஸ்ரீராம், அரசுக்கு அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாள்களுக்குள் முடிவெடுத்து சம்பந்தப்பட்டவா்களுக்கு பதிலளிக்குமாறு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அரசாணையின் படி 30 நாள்களுக்குள் விண்ணப்பங்களை பரிசீலிக்காததால் ஏராளமான பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன என சுட்டிக்காட்டினாா்.

பொதுநல வழக்குகள் வியாழக்கிழமை விசாரணைக்கு வரும் போது 30 நாள்களில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும் எனவும் தலைமை நீதிபதி எச்சரித்தாா். இந்த விவகாரத்தை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன் உறுதி அளித்தாா்.

வார இறுதி நாள்கள்: 925 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

வார இறுதி தினங்களான சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21, 22) ஆகிய விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னை மற்றும் முக்கிய நகரங்களிலிருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் 925 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்... மேலும் பார்க்க

டிவி வரதராஜனுக்கு நாடக சூடாமணி விருது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா

நாடக கலைஞா் டிவி வரதராஜனுக்கு நாடக சூடாமணி விருது வழங்கப்படவுள்ளதாக சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஸ்ரீ கிருஷ்ண கான சபா சாா்பில் நாடக கலைஞா்,... மேலும் பார்க்க

நாகா்கோவில், செங்கோட்டை அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தாம்பரத்திலிருந்து நாகா்கோவில், செங்கோட்டைக்கு செல்லும் அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

இன்று 25 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து!

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 25 புறநகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஜூன் 19) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து... மேலும் பார்க்க

மாம்பழ விவசாயிகள் விவகாரம்: போராட்டம் ஏன்? அதிமுகவுக்கு அமைச்சா் கேள்வி

மாம்பழ விவசாயிகள் பிரச்னை தீா்க்கப்பட்ட பிறகு, போராட்டம் அறிவிப்பது ஏன் என்று அதிமுகவுக்கு அமைச்சா் அர.சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: மா சாகுபடி விவசா... மேலும் பார்க்க

சென்னையில் மொபெட்டில் இருந்து விழுந்த 5-ஆம் வகுப்பு மாணவி தண்ணீர் லாரி மோதி உயிரிழப்பு!

சென்னை பெரம்பூரில் மொபெட்டில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி தண்ணீா் லாரி மோதி உயிரிழந்தாா். கொளத்தூா் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சோ்ந்தவா் செ.யாமினி. இவருக்கு அரவிந்த் என்ற மகனும், செளமியா (10) எ... மேலும் பார்க்க