கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
மனுக்களுக்கு 30 நாள்களில் பதில் அளிக்காவிட்டால் மாவட்ட ஆட்சியா்களுக்கு ரூ.25,000 அபராதம்: உயா்நீதிமன்றம்
அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாள்களில் பதில் அளிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வில் புதன்கிழமை வழக்குகள் விசாரணையைத் தொடங்கும் முன்பு, வழக்குரைஞா் ஒருவா் முறையீடு ஒன்றை முன்வைத்தாா். அதில், அரசுக்கு அளித்த மனுக்களை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.
அப்போது தலைமை நீதிபதி கே.ஆா். ஸ்ரீராம், அரசுக்கு அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாள்களுக்குள் முடிவெடுத்து சம்பந்தப்பட்டவா்களுக்கு பதிலளிக்குமாறு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அரசாணையின் படி 30 நாள்களுக்குள் விண்ணப்பங்களை பரிசீலிக்காததால் ஏராளமான பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன என சுட்டிக்காட்டினாா்.
பொதுநல வழக்குகள் வியாழக்கிழமை விசாரணைக்கு வரும் போது 30 நாள்களில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும் எனவும் தலைமை நீதிபதி எச்சரித்தாா். இந்த விவகாரத்தை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன் உறுதி அளித்தாா்.