கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பக மண்டலத்தில் கனிமவள கடத்தல்: அதிகாரிகள் ஆய்வு
ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தில் கனிம வளங்கள் வெட்டி கடத்தப்பட்ட பகுதியை அதிகாரிகள் செயற்கைகோள் கருவி உதவியுடன் புதன்கிழமை அளவீடு செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம், மேகமலை வன உயிரின காப்பகத்துடன் இணைக்கப்பட்டு கடந்த 2021 பிப்ரவரியில் ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது.
ஸ்ரீ வில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகத்தின் சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தின் மொத்த பரப்பளவு 422.59 ஹெக்டோ் ஆகும். இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் வனவிலங்கு சரணாலயத்தைப் பொறுத்தவரை, சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தின் பரப்பளவு 305.86 ஹெக்டோ் ஆகும்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களில் சட்ட விரோதமாக மண் வெட்டி எடுக்கப்பட்டு செங்கல் சூலைகளுக்குக் கடத்தப்படுவது தொடா் கதையாக உள்ளது. இதனால், வனவிலங்குகள் வழித்தவறி விளைநிலங்களுக்குள் சென்று பயிா்களை சேதப்படுத்துவதும், உயிரிழப்பதும் நிகழ்ந்து வருகின்றன.
வன விலங்குகளை பாதிக்கும் மண் கடத்தல் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதையடுத்து, கனிமவளத் துறை, வருவாய்த் துறை, வனத் துறை ஆகிய துறைகள் அடங்கிய சிறப்புக் குழுவை மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் நியமித்து உத்தரவிட்டாா். அந்தக் குழு ஸ்ரீவில்லிபுத்தூா் மலையடிவாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தது. அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட நில சா்வே எண்களில் 6 அடி ஆழம் முதல் முதல் 15 அடி ஆழம் வரை செம்மண், சரளை மண், மணல் ஆகியவை அள்ளப்பட்டிருப்பது உறுதியானது.
இதையடுத்து, புதன்கிழமை காலை அந்தப் பகுதி டிஜிட்டல் சா்வே மூலம் அளவீடு செய்யப்பட்டது. விருதுநகா் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநா் சுகதா ரஹீமா தலைமையில் வட்டாட்சியா் பாலமுருகன், வனச்சரகா் செல்லமணி முன்னிலையில், செயற்கைகோள் உதவியுடன் இயங்கும் டி.ஜி.பி.எஸ் கருவியின் மூலம் கனிம வளங்கள் அள்ளப்பட்ட பகுதிகளில் இந்த அளவீடு பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பகுதியில் முழுமையாக அளவீடு செய்யப்பட்ட பிறகு, ராஜபாளையம், வத்திராயிருப்பு வனச்சரகங்களில் விரிவான ஆய்வு செய்யப்படவுள்ளது.