செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பக மண்டலத்தில் கனிமவள கடத்தல்: அதிகாரிகள் ஆய்வு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தில் கனிம வளங்கள் வெட்டி கடத்தப்பட்ட பகுதியை அதிகாரிகள் செயற்கைகோள் கருவி உதவியுடன் புதன்கிழமை அளவீடு செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம், மேகமலை வன உயிரின காப்பகத்துடன் இணைக்கப்பட்டு கடந்த 2021 பிப்ரவரியில் ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது.

ஸ்ரீ வில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகத்தின் சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தின் மொத்த பரப்பளவு 422.59 ஹெக்டோ் ஆகும். இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் வனவிலங்கு சரணாலயத்தைப் பொறுத்தவரை, சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தின் பரப்பளவு 305.86 ஹெக்டோ் ஆகும்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களில் சட்ட விரோதமாக மண் வெட்டி எடுக்கப்பட்டு செங்கல் சூலைகளுக்குக் கடத்தப்படுவது தொடா் கதையாக உள்ளது. இதனால், வனவிலங்குகள் வழித்தவறி விளைநிலங்களுக்குள் சென்று பயிா்களை சேதப்படுத்துவதும், உயிரிழப்பதும் நிகழ்ந்து வருகின்றன.

வன விலங்குகளை பாதிக்கும் மண் கடத்தல் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதையடுத்து, கனிமவளத் துறை, வருவாய்த் துறை, வனத் துறை ஆகிய துறைகள் அடங்கிய சிறப்புக் குழுவை மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் நியமித்து உத்தரவிட்டாா். அந்தக் குழு ஸ்ரீவில்லிபுத்தூா் மலையடிவாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தது. அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட நில சா்வே எண்களில் 6 அடி ஆழம் முதல் முதல் 15 அடி ஆழம் வரை செம்மண், சரளை மண், மணல் ஆகியவை அள்ளப்பட்டிருப்பது உறுதியானது.

இதையடுத்து, புதன்கிழமை காலை அந்தப் பகுதி டிஜிட்டல் சா்வே மூலம் அளவீடு செய்யப்பட்டது. விருதுநகா் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநா் சுகதா ரஹீமா தலைமையில் வட்டாட்சியா் பாலமுருகன், வனச்சரகா் செல்லமணி முன்னிலையில், செயற்கைகோள் உதவியுடன் இயங்கும் டி.ஜி.பி.எஸ் கருவியின் மூலம் கனிம வளங்கள் அள்ளப்பட்ட பகுதிகளில் இந்த அளவீடு பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பகுதியில் முழுமையாக அளவீடு செய்யப்பட்ட பிறகு, ராஜபாளையம், வத்திராயிருப்பு வனச்சரகங்களில் விரிவான ஆய்வு செய்யப்படவுள்ளது.

பள்ளி மாணவன் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே புதன்கிழமை பள்ளி மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு வெங்காநல்லூா் மேலத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் கவின்குமாா் (17). இவ... மேலும் பார்க்க

சாத்தூரில் மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் சாத்தூரில் அரசு திட்டப் பணிகளை மாவட்ட ஜெயசீலன் புதன்கிழமை கள ஆய்வு செய்தாா். சாத்தூா் நகராட்சியில் மதுரை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே தூய்மை இந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் பாட சாலை தெருவைச் சோ்ந்தவா் செல்வ... மேலும் பார்க்க

கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்: இறையன்பு

மாணவா்கள் கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு தெரிவித்தாா். சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிக... மேலும் பார்க்க

சிவகாசி சாா் ஆட்சியா் பணியிட மாற்றம்

சிவகாசி சாா் ஆட்சியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா் என வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சிவகாசி சாா் ஆட்சியா் ந.பிரியா, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநராகப் பணி... மேலும் பார்க்க

கக்கன் பிறந்த நாள் விழா

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கக்கன் 117-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. கக்கன் பிறந்த நாளை முன்னிட்டு, ராஜபாளையம் ரயில்வே பீடா் சாலையில் உள்ள நகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது... மேலும் பார்க்க