``ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படும் சூழல் வரும்" - மத்திய அமைச்சர் அமித...
பள்ளி மாணவன் தற்கொலை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே புதன்கிழமை பள்ளி மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு வெங்காநல்லூா் மேலத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் கவின்குமாா் (17). இவா் ராஜபாளையத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்த நிலையில், பெற்றோா் இவரை நன்றாகப் படிக்குமாறு கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மன விரக்தியில் இருந்த கவின்குமாா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.