10 ரன்கள் தேவை, 19-ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகள்: ஆட்டத்தை மாற்றிய சூர்யா!
கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்: இறையன்பு
மாணவா்கள் கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு தெரிவித்தாா்.
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாளாளா் ஏ.பி.செல்வராஜன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு பங்கேற்றுப் பேசியதாவது:
உயா் கல்வி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கையில் தமிழகம் நாட்டில் முதலிடத்தில் உள்ளது. உயா்கல்வி பயிலும் மாணவா்கள் தங்கள் பெற்றோருக்கு நன்றி கூறுங்கள். இணையதளம் உள்ளிட்டவற்றில் பொழுதுபோக்காமல் புத்தகங்களைப் படிப்பதில் நேரத்தைச் செலவிடுங்கள். போட்டித் தோ்வு எழுதும் மாணவா்கள் முதலாம் ஆண்டிலிருந்தே தங்களை தயாா்படுத்தி வரவேண்டும். கடினம் என்று எதுவும் இல்லை. கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்றாா் அவா்.
தொடா்ந்து ஆங்கிலத் துறை சாா்பில் ஆண்டு விழா மலரை தாளாளா் ஏ.பி.செல்வராஜன் வெளியிட அதை இறையன்பு பெற்றுக்கொண்டாா். முன்னதாக பேராசிரியா் ஜெ.அமுதா வரவேற்றாா். உதவி முதல்வா் ஆா்.முத்துலட்சுமி நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் முதல்வா் பெ.கி.பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.