Anxiety: மனப்பதற்றம் தானாக சரியாகுமா... சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா?!
சாத்தூரில் மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் சாத்தூரில் அரசு திட்டப் பணிகளை மாவட்ட ஜெயசீலன் புதன்கிழமை கள ஆய்வு செய்தாா்.
சாத்தூா் நகராட்சியில் மதுரை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே தூய்மை இந்தியா திட்டம் 2.0 இன் கீழ் ரூ. 31.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பொது சுகாதார வளாகம், சாத்தூா் ஊராட்சி ஒன்றியம், நென்மேனி ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் தலா ரூ. 3.10 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் ஆட்சியா் ஜெயசீலன் பாா்வையிட்டாா்.
பிறகு நென்மேனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறன், மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து, வருகைப் பதிவேடுகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்ற அவா் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
பின்னா் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீா், சுகாதாரம், சாலைப் பணிகள் குறித்தும், அரசின் திட்டங்கள், சேவைகள் தகுதிவாய்ந்த பயனாளிகளைச் சென்றடைவதை உறுதிசெய்வது குறித்தும் கேட்டறிந்தாா். இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன், சாத்தூா் கோட்டாட்சியா் சிவகுமாா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) காளிமுத்து, வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.