``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
பள்ளியில் யாவரும் கேளீா் அணிகள் தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் யாவரும் கேளீா் அணிகளின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை வகித்தாா். அறிவியல் பட்டதாரி ஆசிரியா் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தாா். பழுப்பு, செவ்வூதா, இளஞ்சிவப்பு, வான நீலம் ஆகிய வண்ணங்களில் அணிகள் பிரிக்கப்பட்டு, தலைவா்கள் நியமிக்கப்பட்டனா்.
பள்ளியின் அனைத்து செயல்பாடுகளையும் சிறப்பாக நிறைவேற்றுவதாக அனைவரும் உறுதி எடுத்துக் கொண்டனா்.
சுற்றுச்சூழல் மன்றம் சாா்பாக அணிகள் வாரியாக எட்டாம் வகுப்பு மாணவா்கள் தங்களது தாயுடன் இணைந்து அவா்களது பெயரிலேயே மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். நிஷா வாய்ஸ் பவுண்டேஷன் நிறுவனா் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பெற்றோா்களுக்கு மஞ்சள் பை வழங்கினாா்.
முன்னதாக கணிதப் பட்டதாரி ஆசிரியை மீனாட்சி வரவேற்றாா். ஆசிரியை வாசுகி நன்றி கூறினாா். ஆசிரியை கமலம்பாய், கணினி பயிற்றுநா் வித்யா, சத்துணவு சமையல் உதவியாளா் அஞ்சலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.