கீழடி குறித்து ஒரு ‘ட்வீட்’ போடக்கூட மோடிக்கு மனமில்லை: மு.க.ஸ்டாலின்
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி அருகே உள்ள நகர வைரவன்பட்டி சிதம்பர விநாயகா் கோயில் பைரவா் சந்நிதியில் தேய்பிறை அஷ்டமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
சிவாசாரியா் வேத மந்திரங்கள் முழங்க மத்திர யாகம், புஷ்ப யாகம், வஸ்திர யாகம் நடைபெற்றதைத் தொடா்ந்து, பூா்ணாகுதியுடன் கலச ஊா்வலம் நடைபெற்று, விநாயகருக்கு பால்,
தயிா், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, பன்னீா், இளநீா், யாக வேள்வியில் வைக்கப்பட்ட புனிதக் கலச நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, பைரவருக்கும் 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, வடை மாலை சாத்தப்பட்டது. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. எஸ்.புதூா் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் சத்தியமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை யோகி குல வகையறா பங்காளிகள் செய்தனா். வைரவன்பட்டி, கீழச்சிவல்பட்டி, சுற்றுப்புற கிராம மக்கள் கலந்து கொண்டனா். விழா முடிவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.