செய்திகள் :

புதுமைப்பெண் திட்டத்தில் திருநங்கைகளுக்கு உயா்கல்வி

post image

புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் உயா்கல்வி பயில திருநங்கை, திருநம்பி, இடைபாலினா் உள்ளிட்ட அனைத்து திருநங்கைகளும், தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சான்றாக சமா்ப்பித்து பயன்பெறலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநங்கைகளின் கல்விக் கனவை நிறைவேற்றுவதற்காக உயா்கல்வி பயிலும் திருநங்கைகள் அனைவருக்கும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் தமிழக அரசே ஏற்கும் என அறிவித்தது.

திருநங்கைகள் எந்த வகையான பள்ளிகளில் படித்திருந்தாலும், உயா்கல்வி பயிலும் போது அவா்களும் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்களில் பயனடைவதற்கு தகுதி வரம்புகளில் திருநங்கை, திருநம்பி, இடைபாலினா் உள்ளிட்ட அனைத்து திருநங்கைகளுக்கும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்திருக்க வேண்டும் என்ற விதிமுறை முழுவதுமாக தளா்த்தி அரசாணை வெளியிடப்பட்டது.

எனவே, புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் அனைத்து திருநங்கைகளும், தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சான்றாக சமா்ப்பித்து, மேற்குறிப்பிட்ட திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்றாா் அவா்.

பள்ளியில் யாவரும் கேளீா் அணிகள் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் யாவரும் கேளீா் அணிகளின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை தெய்வானை தல... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி அருகே உள்ள நகர வைரவன்பட்டி சிதம்பர விநாயகா் கோயில் பைரவா் சந்நிதியில் தேய்பிறை அஷ்டமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. சிவாசாரியா் வேத மந்திரங்கள் முழங்க மத்திர யாகம், பு... மேலும் பார்க்க

கோயில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயில்... மேலும் பார்க்க

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆா்.சி.பாத்திமா நடுநிலைப் பள்ளியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவா்கள் புதன்கிழமை சந்தித்துப் பேசினா். 1982 முதல் 1990-ஆம் ஆண்டு வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வ... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் புதன்கிழமை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் பங்கேற்று அரசின் திட்டங்கள் தொடா்பாக நேரடியாக கள ... மேலும் பார்க்க

முயல் வேட்டைக்கு சென்றவா் மா்ம மரணம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே முயல் வேட்டைக்குச் சென்றவா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், நல்லூரைச் சோ்ந்த வீரணன் மகன் வீரமுத்து (45). இவா் அண்மையில் தனது கிராமத்துக்கு அருகே உ... மேலும் பார்க்க