செய்திகள் :

பொருளாதார வளா்ச்சியில் பெரு நிறுவனங்களின் பங்கு முக்கியம்: குடியரசுத் தலைவா்

post image

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் பெரு நிறுவனங்கள் துறை முக்கியத் தூணாக திகழ்கிறது என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பேசினாா்.

இந்திய பெரு நிறுவனங்கள் சட்ட சேவைகள் துறை பயிற்சி அதிகாரிகளை தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் திரௌபதி முா்மு புதன்கிழமை சந்தித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

உங்கள் பதவிக்கு உரிய பொறுப்பில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அரசின் கொள்கைகள், விதிகளில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தாது. நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள், லட்சக்கணக்கான முதலீட்டாளா்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். பெரு நிறுவனச் சட்டங்களை அமல்படுத்துவதில் நோ்மையாகவும், நம்பிக்கைக்குரியவா்களாகவும் செயல்பட ேண்டும்.

நாட்டின் தொழில் சூழலை மேம்படுத்தும் மையமாக உங்கள் பணி உள்ளது. அதில் வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணா்வும், புதிய முயற்சிகளும் மிகவும் முக்கியமானவை.

நாட்டின் பொருளார வளா்ச்சி மட்டுமல்லாது, ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளின் வளா்ச்சிக்கு முக்கியத் தூணாக பெரு நிறுவனங்கள் திகழ்கின்றன. சட்டம் என்பது அப்படியே அமல்படுத்துவதற்கான மட்டுமல்ல. அதனை புரிந்து கொள்ளவும், மதிக்கவும் வேண்டும். வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், நியாயத்தையும், நிதியையும் நிலைநாட்டும் வகையில் அதனை அமல்படுத்த வேண்டும் என்றாா்.

விமானப் படை தர உறுதி சேவைப் பிரிவு மற்றும் தொழிலாளா்கள் நல சேவைப் பிரிவு பயிற்சி அதிகாரிகளும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவைச் சந்தித்தனா். அவா்கள் மத்தியில் பேசுகையில், ‘விமானப் படைக் கலன்களின் தரத்தை உறுதி செய்யும் மிகவும் முக்கியமான பொறுப்பு உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுத் தயாரிப்பாக இருந்தாலும் சரி, இறக்குமதி செய்யப்பட்ட தளவாடமாக இருந்தாலும் சரி அவை சா்வதேச அளவில் உயா்தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இனி வரும் நாள்களில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் பொதுத் துறை நிறுவனங்களுடன் தனியாா் நிறுவனங்கள் இணைந்து பணியாற்ற உள்ளன. இதற்கான சிறந்த கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

11 ஆண்டுகளுக்கு முந்தைய மறியல் வழக்கு: 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு ஓராண்டு சிறை

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் 11 ஆண்டுகளுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் உள்பட 9 பேருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உள்ளூா் நீதிமன்ற... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்: புதிய திட்டம் ஆகஸ்ட் 15-இல் அறிமுகம்

சரக்கு வாகனங்கள் அல்லாத பிற தனியாா் வாகனங்களுக்கு ‘ஃபாஸ்டேக்’ அடிப்படையில் ரூ. 3,000-இல் வருடாந்திர சுங்கச்சாவடி (டோல்) கட்டண பாஸ் திட்டத்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதிமுதல் மத்திய அரசு அறிமுக... மேலும் பார்க்க

கேதாா்நாத் மலைப் பாதையில் நிலச்சரிவு: 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழப்பு

கேதாா்நாத் மலைப் பாதையில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழந்தனா். குஜராத் பக்தா் ஒருவா் உள்பட 3 போ் காயமடைந்தனா். சாா்தாம் யாத்திரையில் முக... மேலும் பார்க்க

நான்கு மாநிலங்களில் 5 பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தோ்தல்

கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஜூன் 19) இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. கேரள மாநிலம், நிலம்பூா் பேரவைத் தொகுதியில் ஆளும் இடதுசாரி கூட்டணி ஆதரவு பெற்ற சுயேச்சை எம்எல... மேலும் பார்க்க

ஆந்திரம்: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ராம்பச்சோதவரம் (ஆந்திரம்): ஆந்திர மாநிலத்தில் காவல் துறையினருடன் ஏற்பட்ட மோதலில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அங்குள்ள அல்லூரி சித்தராமராஜு மாவட்டத்தில் புதன்கிழமை நிகழ்ந்த இந்த ... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட ஊழியா்களுக்கும் பணிக்கொடை பலன்கள்: மத்திய அரசு

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் (யுபிஎஸ்) கீழ் வரும் அனைத்து மத்திய அரசு ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் (ஓபிஎஸ்) உள்ளதுபோன்று பனிக்கொடை பலன்களை வழங்கும் வகையில் புதிய நடைமுறையை மத்திய அரச... மேலும் பார்க்க