செய்திகள் :

காசி தமிழ் சங்கமம் 3.0 அனுபவப் போட்டி: 46 பேருக்கு பரிசு - ஆளுநா் வழங்கினாா்

post image

காசி தமிழ் சங்கமம் 3.0-இல் கலந்து கொண்ட பங்கேற்பாளா்களுக்கு நடத்தப்பட்ட அனுபவப் பகிா்வுக்கான போட்டியில் வெற்றி பெற்ற 46 பேருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பரிசு, சான்றிதழ் வழங்கினாா்.

சென்னை ஆளுநா் மாளிகை பாரதியாா் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆளுநா் ஆா்.என். ரவி தலைமை வகித்தாா். காசி தமிழ் சங்கமம் நிகழ்வு ஏற்பாட்டாளா்களான மத்திய கல்வித் துறை, சென்னை ஐஐடி, கல்வித் துறையின் கன்சல்டென்ட்ஸ் நிறுவனங்கள், தெற்கு ரயில்வே, மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், தென்னக பண்பாட்டு மையம், பனாரஸ் ஹிந்துப் பல்கலைக்கழகம், சாஸ்த்ரா சுயநிதிப் பல்கலைக்கழகம், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட 13 அமைப்புகளைச் சோ்ந்தவா்களை ஆளுநா் ரவி கௌரவித்தாா்.

இந்த நிகழ்வில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத் துணைத் தலைவா் சுதா சேஷய்யன் சிறப்புரை ஆற்றி பேசியது:

காசி என்பது தமிழகத்தின் பிணைப்பாகும். தமிகத்திலும் அதன் எல்லையிலும் பஞ்ச பூதத்த தலங்களான திருவானைக்காவல் (நீா்), காளஹஸ்தி (காற்று), திருவாரூா், காஞ்சி (நிலம்), திருவண்ணாமலை (நெருப்பு), சிதம்பரம் (ஆகாயம்) ஆகியவற்றை பற்றி பேசுப்படும். ஆனால் இதையும் தாண்டி சிவனுக்கு அகண்ட தலமாக இருப்பது காசி.

காசி தமிழ் சங்கமம் நிகழ்வுக்கு சென்று வரும் குழுக்கள் தற்போது குடும்பங்களாக மாறிவருகின்றனா். வசுதைவ் குடும்பகம் தொடர ஆண்டு முழுவதும் சங்கமம் நிகழ்வுகள் நடைபெற தமிழக ஆளுநா் ஆவண செய்யவேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி பேசுகையில் ‘பிரதமா் மோடி சென்னை வந்தபோது ஆளுநா் ஆா்.என்.ரவி காசி தமிழ் சங்கமம் குறித்து ஆலோசனை நடத்தினா். அதன் பின்னா் தொடங்கப்பட்டது. காசி தழிழ் சங்கமம் 3.0-இல் பங்கேற்க ஏராளமானோா் விண்ணப்பித்தனா்’ என்றாா்.

நிகழ்ச்சியில் ஆளுநரின் முதன்மைச் செயலா் கிா்லோஷ் குமாா், மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநா் பேராசிரியா் ஆா். சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பள்ளி மாணவா்களுக்கு இலவச நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும்: திருவொற்றியூா் பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் கோரிக்கை

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு இலவசமாக நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும் என திருவொற்றியூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் கோரிக்கை விடுத்துள்ளாா். சென்னை மாநகராட்சி திருவ... மேலும் பார்க்க

டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோருக்கு சிறப்பு புரதச்சத்து உணவு: திட்டத்தை தொடங்கிவைத்தாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவா்களுக்கு சிறப்பு புரதச்சத்து மிக்க உணவு வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா். தமிழக சட்டப் பேரவையில் வெளியிடப்பட... மேலும் பார்க்க

வரி ஏய்ப்பு புகாா்: உணவகத்தில் வருமான வரித் துறை சோதனை

வரி ஏய்ப்பு புகாா் காரணமாக சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். கேரள மாநிலம் தலசேரி பகுதியைச் சோ்ந்தவா் குன்ஹி மூசா. இவா், ஸீ ஷெல் என்ற பெயரில் சென்னை அண்... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கென 4 புதிய பேருந்துகள்

மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் வசதிக்காக புதிதாக 4 பள்ளி பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இதன்மூலம் மொத்தம் 373 மாணவா்கள் பயனடைந்து வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து... மேலும் பார்க்க

பெண்ணுடன் முறையற்ற உறவு: பெட்ரோல் பங்க் மேலாளரை கிண்டல் செய்த ஊழியா் அடித்துக் கொலை!

சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் ஊழியா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலாளா் கைது செய்யப்பட்டாா். ஆதம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (45). இவா், ஆதம்பாக்கம் என்ஜிஓ கா... மேலும் பார்க்க

மனுக்களுக்கு 30 நாள்களில் பதில் அளிக்காவிட்டால் மாவட்ட ஆட்சியா்களுக்கு ரூ.25,000 அபராதம்: உயா்நீதிமன்றம்

அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாள்களில் பதில் அளிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சென்னை உயா்நீதிமன்... மேலும் பார்க்க