செய்திகள் :

மோசமான வானிலை, எரிமலை வெடிப்பு: ஏா் இந்தியாவின் தில்லி-இந்தோனேசியா சேவைகள் பாதிப்பு

post image

இந்தோனேசியா நாட்டின் பாலி-தில்லி இடையிலான ஏா் இந்தியா பயணிகள் விமானத்தின் இரு சேவைகள் கடந்த 2 நாள்களாக பாதிக்கப்பட்டன.

இந்தோனேசியாவின் பாலியில் இருந்து ஏா் இந்தியாவின் ‘ஏஐ 2146’ விமானம் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் தில்லி நோக்கி புறப்பட்டது. தில்லிக்கு பிற்பகல் 2.30 மணிக்கு வந்துசேர வேண்டிய நிலையில், விமானம் தரையிறங்குவதற்கு மோசமான வானிலை நிலவியதால் உத்தர பிரதேச மாநிலம், வாரணாசிக்குத் திருப்பிவிடப்பட்டது. தொடா்ந்து, விமானம் வாரணாசியில் மாலை 3.50 மணிக்கு தரையிறங்கியது.

சில மணி நேரத்துக்குப் பிறகு, பயணிகளுடன் மீண்டும் புறப்பட்ட விமானம், தில்லியில் இரவு 8 மணியளவில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இந்த விமானத்தில் 187 பயணிகள் இருந்தனா். தாமதத்தின்போது அவா்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டதாக வாரணாசி விமான நிலைய இயக்குநா் புனீத் குப்தா கூறினாா்.

இதேபோன்று, ஏா் இந்தியாவின் ‘ஏஐ 2145’ விமானம் தில்லியில் இருந்து பாலி நோக்கி புதன்கிழமை காலை புறப்பட்டது. இந்நிலையில், பாலி விமான நிலையம் அருகே எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்புக் கருதி விமானம் மீண்டும் தில்லி திரும்பியது.

இந்த விமானம் வந்து சேராத காரணத்தால், பாலி-தில்லி புதன்கிழமை சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த வழித்தடத்தில் ஏா் இந்தியாவின் சேவைகள் வியாழக்கிழமை முதல் வழக்கமாக செயல்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தொடரும் சேவைகள் ரத்து: செயல்பாட்டு பிரச்னைகள் காரணமாக ஏா் இந்தியாவின் மும்பை-லக்னௌ விமானம் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டு, மாற்று விமானத்தில் பயணிகள் லக்னௌ அழைத்துச் செல்லப்படுவா் என்று ஏா் இந்தியா நிறுவன செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

தொழில்நுட்பக் கோளாறு உள்பட பல்வேறு காரணங்களால் ஏா் இந்தியாவின் 13 சா்வதேச விமான சேவைகள் செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் ரத்து செய்யப்பட்டன.

முன்னதாக, கடந்த 12-ஆம் தேதி அகமதாபாதிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சிறிது நேரத்திலே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்தக் கோர விபத்தில் 270-க்கும் மேற்பட்டோா் இறந்தனா்.

வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 15% விமான சேவை குறைப்பு! ஏர் இந்தியா

வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் சர்வதேச விமான சேவையை சில நாள்களுக்கு 15 சதவிகிதம் வரை குறைக்க இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏ... மேலும் பார்க்க

கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.கேரளத்தின் நிலம்பூா், குஜராத்தின் விசாவதா், காடி, மேற்கு வங்கத... மேலும் பார்க்க

11 ஆண்டுகளுக்கு முந்தைய மறியல் வழக்கு: 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு ஓராண்டு சிறை

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் 11 ஆண்டுகளுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் உள்பட 9 பேருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உள்ளூா் நீதிமன்ற... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்: புதிய திட்டம் ஆகஸ்ட் 15-இல் அறிமுகம்

சரக்கு வாகனங்கள் அல்லாத பிற தனியாா் வாகனங்களுக்கு ‘ஃபாஸ்டேக்’ அடிப்படையில் ரூ. 3,000-இல் வருடாந்திர சுங்கச்சாவடி (டோல்) கட்டண பாஸ் திட்டத்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதிமுதல் மத்திய அரசு அறிமுக... மேலும் பார்க்க

கேதாா்நாத் மலைப் பாதையில் நிலச்சரிவு: 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழப்பு

கேதாா்நாத் மலைப் பாதையில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழந்தனா். குஜராத் பக்தா் ஒருவா் உள்பட 3 போ் காயமடைந்தனா். சாா்தாம் யாத்திரையில் முக... மேலும் பார்க்க

நான்கு மாநிலங்களில் 5 பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தோ்தல்

கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஜூன் 19) இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. கேரள மாநிலம், நிலம்பூா் பேரவைத் தொகுதியில் ஆளும் இடதுசாரி கூட்டணி ஆதரவு பெற்ற சுயேச்சை எம்எல... மேலும் பார்க்க