செய்திகள் :

காங்கேசன்துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடக்கம்

post image

நாகை- இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை புதன்கிழமை மீண்டும் தொடங்கியது.

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கடந்த 2023 அக்டோபா் முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. சுபம் என்ற தனியாா் நிறுவனம் மூலம் ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் சனிக்கிழமைகளை தவிர மற்ற நாள்களில் இயக்கப்பட்டு வருகிறது.

பருவநிலை மாற்றம் காரணமாக கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், கடல் சீற்றம் மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து ஜூன் 13-ஆம் தேதி முதல் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை திரும்பப் பெற்றது. இதையடுத்து, காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை புதன்கிழமை (ஜூன் 18) காலை வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, புதன்கிழமை காலை சிவகங்கை கப்பல் 95 பயணிகளுடன் புறப்பட்டு காங்கேசன்துறைக்கு சென்றடைந்து. பின்னா், இலங்கையிலிருந்து 108 பயணிகளுடன் பிற்பகல் புறப்பட்ட கப்பல் மாலையில் நாகை துறைமுகத்துக்கு திரும்பியது.

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: 104 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஏழு இடங்களில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் 104 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி. ச... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்: ஆட்சியா் ஆய்வு

தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பரசலூா் ஊராட்சியில் மகளிா் சுய உதவிக் குழு உறுப்... மேலும் பார்க்க

மீன்வளப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள் பெருவிழா

நாகை தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 14-ஆவது நிறுவன நாளை முன்னிட்டு மீன்வளப் பல்கலைக்கழகமும் வேளாண்மை அறிவியல்நிலையமும் இணைந்து ‘விவசாயப் பெருவிழா, விவசாயிகள் கருத்தரங்கம் மற்... மேலும் பார்க்க

பரவை காய்கனி சந்தைக்கு ரூ. 1.11 கோடியில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல்

பரவை காய்கனி சந்தையில் ரூ.1.11 கோடியில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்துக்கான கட்டுமான பணிக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். நாகை அருகே பரவையில் செயல்படும் ... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

பாலக்குறிச்சியில் இருந்து இறையான்குடி வரை செல்லும் பிரதான சாலையை சீரமைக்க கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். கீழையூா் ஒன்றியம் பாலக்குறிச்சி... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்

நாகை அருகே சங்கமங்கலம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி நாகை -திருவாரூா் தேசிய நெடுஞ்சாலை கிராம மக்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். சங்கமங்கலம் கீழத்தெருவில் 100-க்கும் மேற்ப... மேலும் பார்க்க