பரவை காய்கனி சந்தைக்கு ரூ. 1.11 கோடியில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல்
பரவை காய்கனி சந்தையில் ரூ.1.11 கோடியில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்துக்கான கட்டுமான பணிக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
நாகை அருகே பரவையில் செயல்படும் காய்கனி சந்தை மிகவும் பிரபலமானது. இந்த சந்தையில் நாகை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கனிகளை விவசாயிகள் நேரடியாக குறைந்த விலையில் விற்பனை செய்வா். இங்கு விற்பனை செய்யப்படும் காய்கனிகளுக்கு நாகை மாவட்டம் மட்டுமின்றி திருவாரூா், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.
பரவை காய்கனி சந்தைக்கு போதுமான கட்டட வசதியில்லை என்பது குறையாகவே இருந்தது. தற்போது ரூ.1.11 கோயில் புதிய கட்டடம் கட்டுவதற்கு இந்து சமய அறநிலையத் துறை மூலம் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி புதிய கட்டட கட்டுமான பணிகளுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினாா். இதையொட்டி நடைபெற்ற விழாவில் நாகை மண்டல இணை ஆணையா் குமரேசன் உதவி ஆணையா் ராஜ இளம்பெருவழுதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.