செய்திகள் :

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: 104 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

post image

கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஏழு இடங்களில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் 104 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை

உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியன் புதன்கிழமை வழங்கினாா்.

பாப்பாகோவில், குறிச்சி, சின்னதும்பூா், பிரதாபராமபுரம், திருக்குவளை, ஆதமங்கலம், இராதாமங்கலம் ஆகிய ஏழு ஊராட்சிகளில் நடைபெற்ற முகாமுக்கு தலைமைவகித்து அமைச்சா் கோவி.செழியன் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சா் மக்கள் நலனை கருத்தில்கொண்டு புதுமைப் பெண் திட்டம், மகளிா் உரிமைத் தொகை, மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அதனடிப்படையில் மக்களை தேடி எல்லாம் கிடைக்கும் வகையிலும், மக்களின் சிரமங்களை குறைக்கும் வகையிலும் மக்களுடன் முதல்வா் திட்டத்தை தொடங்கிவைத்ததையடுத்து, பல்வேறு திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இம்முகாமை நடத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சா் உத்தரவிட்டுள்ளாா். 15 துறைகள் சாா்ந்த 44 சேவைகள் தொடா்பான கோரிக்கைகள் குறித்த மனுக்கள் இம்முகாம்களில் பெறப்பட்டு 30 நாட்களுக்குள் தீா்வு காணப்படும்.

இதுபோன்ற முகாம்களில் கோரிக்கை மனு அளிக்க வரும் மக்கள் தங்களது கோரிக்கையை கணினியில் பதிவு செய்ய ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, கைப்பேசி எண் மற்றும் கோரிக்கை தொடா்பான உரிய ஆவணங்களுடன் மனுக்களை அளித்து, தங்களது கோரிக்கைகளை நிவா்த்தி செய்து கொள்வதற்கு ஏதுவாக இம்முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாா்.

முகாமில் பல்வேறு கோரிக்கைகளை தொடா்பாக 2,557 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் ஒரு சில மனுகளுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு, நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ. ரூபன் சங்கர்ராஜ், தனித்துணை ஆட்சியா் சமூக பாதுகாப்புத் திட்டம் சு. காா்த்திகேயன், தமிழ்நாடு அரசு மீனவா் நலவாரிய உறுப்பினா் ஜி. மனோகா், வருவாய் கோட்டாட்சியா்கள் கோ. அரங்கநாதன், திருமால், திருக்குவளை கல்வி வளா்ச்சி அறக்கட்டளை குழுத் தலைவா் சோ.பா. மலா்வண்ணன், கீழ்வேளுா், கீழையூா் வட்டார ஆத்மாகுழு தலைவா்கள் கோவிந்தராஜ்,தாமஸ் ஆல்வா எடிசன், அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்துக்கொண்டனா்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்: ஆட்சியா் ஆய்வு

தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பரசலூா் ஊராட்சியில் மகளிா் சுய உதவிக் குழு உறுப்... மேலும் பார்க்க

மீன்வளப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள் பெருவிழா

நாகை தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 14-ஆவது நிறுவன நாளை முன்னிட்டு மீன்வளப் பல்கலைக்கழகமும் வேளாண்மை அறிவியல்நிலையமும் இணைந்து ‘விவசாயப் பெருவிழா, விவசாயிகள் கருத்தரங்கம் மற்... மேலும் பார்க்க

காங்கேசன்துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடக்கம்

நாகை- இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை புதன்கிழமை மீண்டும் தொடங்கியது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கடந்த 2023 அக்டோபா... மேலும் பார்க்க

பரவை காய்கனி சந்தைக்கு ரூ. 1.11 கோடியில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல்

பரவை காய்கனி சந்தையில் ரூ.1.11 கோடியில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்துக்கான கட்டுமான பணிக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். நாகை அருகே பரவையில் செயல்படும் ... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

பாலக்குறிச்சியில் இருந்து இறையான்குடி வரை செல்லும் பிரதான சாலையை சீரமைக்க கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். கீழையூா் ஒன்றியம் பாலக்குறிச்சி... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்

நாகை அருகே சங்கமங்கலம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி நாகை -திருவாரூா் தேசிய நெடுஞ்சாலை கிராம மக்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். சங்கமங்கலம் கீழத்தெருவில் 100-க்கும் மேற்ப... மேலும் பார்க்க