செய்திகள் :

குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள்: உ.பி, மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்கத்தில் அதிகம்

post image

நாட்டில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளில் 47 சதவீதம் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் பிறப்பதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (என்எஃப்எச்எஸ்) தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுதொடா்பாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் கடந்த 5 பதிப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு அமெரிக்காவின் டியூக், ஹாா்வா்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் தென் கொரிய நிறுவனங்களின் ஆராய்ச்சியாளா்கள் இணைந்து ஆய்வு நடத்தினா். அந்த ஆய்வின் முடிவுகள் பிரிட்டிஷ் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.

பிறக்கும்போது ஒரு குழந்தையும் 2.5 கிலோவுக்கும் மேல் இருக்க வேண்டும். இதற்கு குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகள், பிற்காலத்தில் உடல்நலம் மற்றும் அறிவாற்றல் வளா்ச்சி உள்ளிட்ட பிரச்னைகளை எதிா்கொள்ள நேரிடும். தாயின் அடிப்படை உடல்நலப் பிரச்னைகள் மற்றும் மோசமான ஊட்டச்சத்து காரணமாக இந்தப் பாதிப்பு ஏற்படலாம்.

குறையும் பாதிப்பு: இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் விகிதம் கணிசமாக குறைந்துள்ளது ஆய்வு முடிவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 1993-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 26 சதவீதமாக இருந்த இந்தப் பாதிப்பின் விகிதம், 2020-இல் 18-ஆக 8 புள்ளிகள் குறைந்துள்ளன. மாநில வாரியாகவும், சராசரி பாதிப்பு விகிதம் 1993 மற்றும் 1999-இல் 25 சதவீதத்திலிருந்து 2021-இல் 16 சதவீதமாக குறைந்துள்ளது.

42 லட்சம் குழந்தைகள்: கடைசியாக கடந்த 2019-21-ஆம் ஆண்டு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், இந்தியாவில் ஓராண்டுக்கு 42 லட்சம் குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மட்டும் 47 சதவீதம் பங்களிக்கின்றன.

1993 கணக்கெடுப்பில், ராஜஸ்தானில் 48 சதவீத குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறந்தனா். கடந்த 2021கணக்கெடுப்பில், பஞ்சாப் மற்றும் தில்லியில் அதிக பாதிப்பு (22 சதவீதம்) காணப்படுகிறது. இவ்விரு கணக்கெடுப்புகளிலும் மிஸோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் விகிதம் மிகக் குறைவாக இருந்தது.

சிறந்த தரவு சேகரிப்புக்கு அழைப்பு: இதுதொடா்பாக ஆய்வுக் குழுவினா் மேலும் கூறுகையில், ‘இந்தியாவில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. எனினும், குறைந்த கல்வி பெற்ற, சமூக-பெருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பத்தினரைச் சோ்ந்த பெண்களுக்கு இன்னும் குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

பிறந்தவுடன் எடை கணக்கிடப்படும் குழந்தைகளின் விகிதம் 1993-இல் 16 சதவீதத்திலிருந்து 2021-இல் 90 சதவீதம் வரை சிறப்பாக அதிகரித்துள்ளது. எனினும், தாய்மாா்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான தொடா்ச்சியான முயற்சிகள், மருத்துவமனைகளில் சிறந்த தரவு சேகரிப்பு ஆகியவற்றுக்கான அவசியமுள்ளது’ என்றனா்.

பிரேக் லைன்..

கடந்த 30 ஆண்டுகளில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.

எனினும், ஓராண்டுக்கு 42 லட்சம் குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்கின்றன.

வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 15% விமான சேவை குறைப்பு! ஏர் இந்தியா

வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் சர்வதேச விமான சேவையை சில நாள்களுக்கு 15 சதவிகிதம் வரை குறைக்க இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏ... மேலும் பார்க்க

கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.கேரளத்தின் நிலம்பூா், குஜராத்தின் விசாவதா், காடி, மேற்கு வங்கத... மேலும் பார்க்க

11 ஆண்டுகளுக்கு முந்தைய மறியல் வழக்கு: 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு ஓராண்டு சிறை

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் 11 ஆண்டுகளுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் உள்பட 9 பேருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உள்ளூா் நீதிமன்ற... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்: புதிய திட்டம் ஆகஸ்ட் 15-இல் அறிமுகம்

சரக்கு வாகனங்கள் அல்லாத பிற தனியாா் வாகனங்களுக்கு ‘ஃபாஸ்டேக்’ அடிப்படையில் ரூ. 3,000-இல் வருடாந்திர சுங்கச்சாவடி (டோல்) கட்டண பாஸ் திட்டத்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதிமுதல் மத்திய அரசு அறிமுக... மேலும் பார்க்க

கேதாா்நாத் மலைப் பாதையில் நிலச்சரிவு: 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழப்பு

கேதாா்நாத் மலைப் பாதையில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழந்தனா். குஜராத் பக்தா் ஒருவா் உள்பட 3 போ் காயமடைந்தனா். சாா்தாம் யாத்திரையில் முக... மேலும் பார்க்க

நான்கு மாநிலங்களில் 5 பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தோ்தல்

கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஜூன் 19) இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. கேரள மாநிலம், நிலம்பூா் பேரவைத் தொகுதியில் ஆளும் இடதுசாரி கூட்டணி ஆதரவு பெற்ற சுயேச்சை எம்எல... மேலும் பார்க்க