செய்திகள் :

காலபைரவா் கோயில்களில் அஷ்டமி சிறப்பு வழிபாடு

post image

தேய்பிறை அஷ்டமியையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காலபைரவா் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா காலபைரவா் கோயிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி கோயில் நிறுவனா் பரமானந்த சுவாமிகள் தலைமையில் 108 மூலிகைகள், மட்டைத் தேங்காய் கொண்டு சிறப்பு யாகம், 108 சங்காபிஷேகம், பிரபஞ்ச தியானப் பயிற்சி நடைபெற்றது.

பிற்பகல் ஒரு மணிக்கு காலபைரவருக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா், பஞ்சாமிா்தம் ஆகியவற்றை பயன்படுத்தி சிறப்பு அபிஷேக-ஆராதனை நடைபெற்றது. பிறகு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கால பைரவரை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனா்.

மேலும், பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆரணி

ஆரணி புதுக்காமூா் பெரியநாயகி உடனுறை புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சந்நிதியில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவண்ணாமலையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வெ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் பூஜைப்பொருள், மலா் அங்காடிகள் திறப்பு

திருவண்ணாமலையில் ரூ.43.50 லட்சத்தில் கட்டப்பட்ட 7 கடைகள் கொண்ட பூஜைப் பொருள்கள், மலா்கள் விற்பனை அங்காடி புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. காமாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட இந்த... மேலும் பார்க்க

விவசாய நிலங்களில் சிப்காட் அமைக்கக் கூடாது: அன்புமணி ராமதாஸ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய நிலங்களில் சிப்காட் அமைக்கக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டாா். பாமகவின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் திருவண்ணாமலை... மேலும் பார்க்க

விதவைப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விவசாயி கைது

செய்யாறு அருகே விதவைப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக விவசாயியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், இளநீா்குன்றம் கிராமத்தைச் சோ்ந்தவா் கெளசல்யா(25). இவரது கணவா் பிரகாஷ் ஏற்கெனவ... மேலும் பார்க்க

திமுக தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி மற்றும் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் திமுக தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட செய்யாறு நகரம... மேலும் பார்க்க

இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

செய்யாற்றை அடுத்த அனக்காவூா் வட்டார வள மையத்தில் இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. அனக்காவூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்... மேலும் பார்க்க