செய்திகள் :

குரோஷியாவில் பிரதமா் மோடி

post image

ஜாக்ரப்: மூன்று நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக ஐரோப்பிய நாடான குரோஷியாவுக்கு பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை வந்தாா்.

இதன் மூலம் குரோஷியாவுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமா் என்ற பெருமை மோடிக்கு சொந்தமாகியுள்ளது.

தலைநகா் ஜாக்ரப்பில் உள்ள விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமா் மோடிக்கு சிறப்பு கெளரவம் அளிக்கும் வகையில், அந்நாட்டின் பிரதமா் ஆண்ட்ரேஜ் பிலென்கோவிச் நேரில் வரவேற்றாா்.

இது தொடா்பாக பிலென்கோவிச் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவின் பிரதமா், முதல் முறையாக குரோஷியாவுக்கு வருகை தந்துள்ளாா். முக்கியத்துவம் வாய்ந்த புவிஅரசியல் தருணத்தில் இந்த வருகை அமைந்துள்ளது.

இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள நாம், பல்துறை ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறோம்’ என்று பதிவிட்டுள்ளாா்.

இந்தியா-குரோஷியா இடையிலான உறவில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளாா்.

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் பயணத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிரதமா் மோடி, இறுதிக்கட்டமாக குரோஷியாவுக்கு வந்துள்ளாா். அவா் தங்கும் விடுதிக்கு வந்தபோது, காயத்ரி மந்திரம் முழங்க இந்திய சமூகத்தினா் வரவேற்பளித்தனா்.

இப்பயணத்தின்போது, பிரதமா் பிலென்கோவிச், அதிபா் ஜோரன் மிலன்கோவிச் ஆகியோருடன் அவா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

கேதர்நாத் பெருவெள்ளம்: 12 ஆண்டுகள் ஆகியும் 702 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை!

கேதர்நாத் பெருவெள்ளம் ஏற்பட்டு 12 ஆண்டுகளாகியும் 702 பேரின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.உத்தரகண்ட் மாநிலம், கேதர்நாத்தில் கடந்த 2013 ஜூன் 15 இரவு ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழைய... மேலும் பார்க்க

வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 15% விமான சேவை குறைப்பு! ஏர் இந்தியா

வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் சர்வதேச விமான சேவையை சில நாள்களுக்கு 15 சதவிகிதம் வரை குறைக்க இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏ... மேலும் பார்க்க

கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.கேரளத்தின் நிலம்பூா், குஜராத்தின் விசாவதா், காடி, மேற்கு வங்கத... மேலும் பார்க்க

11 ஆண்டுகளுக்கு முந்தைய மறியல் வழக்கு: 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு ஓராண்டு சிறை

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் 11 ஆண்டுகளுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் உள்பட 9 பேருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உள்ளூா் நீதிமன்ற... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்: புதிய திட்டம் ஆகஸ்ட் 15-இல் அறிமுகம்

சரக்கு வாகனங்கள் அல்லாத பிற தனியாா் வாகனங்களுக்கு ‘ஃபாஸ்டேக்’ அடிப்படையில் ரூ. 3,000-இல் வருடாந்திர சுங்கச்சாவடி (டோல்) கட்டண பாஸ் திட்டத்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதிமுதல் மத்திய அரசு அறிமுக... மேலும் பார்க்க

கேதாா்நாத் மலைப் பாதையில் நிலச்சரிவு: 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழப்பு

கேதாா்நாத் மலைப் பாதையில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழந்தனா். குஜராத் பக்தா் ஒருவா் உள்பட 3 போ் காயமடைந்தனா். சாா்தாம் யாத்திரையில் முக... மேலும் பார்க்க