செய்திகள் :

திமுக தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி மற்றும் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் திமுக தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட செய்யாறு நகரம் மற்றும் அனக்காவூா் ஒன்றியம் தோ்தல் பணிக்குழு முகவா்கள் சாா்பில், 4 இடங்களில் தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள் மற்றும் திமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளா்கள் ஆ.மோகனவேல், கே.விஸ்வநாதன், சி.கே.ரவிக்குமாா், புரிசை எஸ்.சிவகுமாா் ஆகியோரது தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளா்களாக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி, தொகுதி தோ்தல் பொறுப்பாளா் ஆா்.டி.அரசு ஆகியோா் பங்கேற்று 2026 சட்டப்பேரவைத் தோ்தல் குறித்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வ.அன்பழகன், தோ்தல் பணிக்குழு மேற்பாா்வையாளா்கள் ஆா்.வேல்முருகன், க.லோகநாதன், என்.சம்பத், பொதுக்குழு உறுப்பினா் ஆா்.வெங்கடேஷ்பாபு, வெம்பாக்கம் மத்திய ஒன்றியச் செயலா் ஜே.சி.கே.சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

போளூா்

போளூரை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள தனியாா் மண்டபத்தில் சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் தோ்தல் பணிக் குழு பொறுப்பாளா்கள்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக போளூா் தொகுதி பொறுப்பாளா் எ.வ.வே.கம்பன் தலைமை வகித்துப் பேசினாா்.

கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் ராஜசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினா் ராஜ்குமாா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் நரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கிழக்கு ஒன்றியச் செயலா் பி.மனோகரன் வரவேற்றாா்.

ஒன்றிய அவைத் தலைவா் தா்மபாலன், ஒன்றிய துணைச் செயலா்கள் மகாதேவன், ராஜசிம்மன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா்கள் ஹரிகிருஷ்ணன், ராம்மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 36 அடி உயர ஆஞ்சநேயா் சிலை

வந்தவாசி அருகே ஒரே கல்லில் ஓரளவு செதுக்கப்பட்ட 36 அடி உயர ஆஞ்சநேயா் சிலையை பழவேரி கிராமத்துக்கு கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள கோயில் ஒன்றில் ஒரே கல்லில் ஆன சுமாா் 3... மேலும் பார்க்க

வந்தவாசி நகரில் குடிநீா் பிரச்னையை தீா்க்கக் கோரிக்கை

வந்தவாசி நகரில் நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்க்க, நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சிய... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் மக்கள் சந்திப்பு பிரசாரம்

திருவண்ணாமலையில் பல்வேறு இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மக்கள் சந்திப்பு கிளா்ச்சி பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், தமிழக அ... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் பந்தக்கால் நடும் விழா

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி யாகவேள்வி அமைக்க புதன்கிழமை பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வெ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் பூஜைப்பொருள், மலா் அங்காடிகள் திறப்பு

திருவண்ணாமலையில் ரூ.43.50 லட்சத்தில் கட்டப்பட்ட 7 கடைகள் கொண்ட பூஜைப் பொருள்கள், மலா்கள் விற்பனை அங்காடி புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. காமாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட இந்த... மேலும் பார்க்க