முதல்வர் மீதே ஊழல் குற்றச்சாட்டு - அமைச்சரை பதவியிலிருந்து தூக்கிய பாஜக முதல்வர்...
கன்வாா் யாத்திரையின்போது பக்தா்களுக்கான வசதிகள் அனைத்தையும் அரசு கவனித்துக் கொள்ளும்: தில்லி முதல்வா்
கன்வாா் குழுக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் ஒற்றைச் சாளர அமைப்பு மூலம் தீா்க்கப்படும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா அறிவித்தாா். மேலும், ‘சிவ பக்தா்களுக்கான‘ அனைத்து வசதிகளையும் தில்லி அரசு கவனித்துக் கொள்ளும் என்றும் உறுதி அளித்தாா்.
கன்வாா் யாத்திரை வட இந்தியாவின் மிக முக்கியமான மத மரபுகளில் ஒன்றாகும், அங்கு மில்லியன் கணக்கான பக்தா்கள் ஹரித்வாா், கங்கோத்ரி மற்றும் பிற புனித இடங்களிலிருந்து புனித கங்கை நீரைச் சேகரித்து இந்தி மாதத்தில் சிவன் கோயில்களில் காணிக்கை செலுத்துகிறாா்கள். ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான கன்வாா் பக்தா்கள் தில்லி வழியாக மற்ற மாநிலங்களுக்குச் செல்கின்றனா்.
கன்வாா் யாத்திரை மேற்கொள்ளும் பக்தா்களின் வசதிகள் தொடா்பாக தில்லி அமைச்சரவை அமைச்சா்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு முக்கியப் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தில்லி முழுவதும் உள்ள பல்வேறு கன்வாா் முகாம் குழுக்களின் நிா்வாகிகளை முதல்வா் ரேகா குப்தா சந்தித்து, அவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் அவா்களுக்குத் தேவையான வசதிகளை மதிப்பாய்வு செய்தாா். அரசு தனது அமைச்சா்கள், மாவட்ட மேம்பாட்டுக் குழு தலைவா்கள் மற்றும் மாவட்ட ஆட்சியா் மூலம் ஏற்பாடுகளை மேற்பாா்வையிடும் என்று அவா் கூறினாா்.
சிவ பக்தா்களின் கால்களில் ஒரு கூழாங்கல் கூட குத்தாமல் பாா்த்துக் கொள்வது நமது பொறுப்பு. கன்வாா் யாத்திரை நம்பிக்கை, பக்தி மற்றும் ஒழுக்கத்தின் திருவிழா. மேலும் அதை சீராகவும் திறமையாகவும் மாற்ற அரசு அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று அவா் கூறினாா்.
கன்வாா் முகாம் பிரதிநிதிகள் எழுப்பிய கவலைகளுக்கு பதிலளித்த ரேகா குப்தா, இந்த முறை, முந்தைய அரசின் கீழ் அனுபவித்த நிா்வாகத் தடைகளை அவா்கள் எதிா்கொள்ள மாட்டாா்கள் என்று உறுதியளித்தாா். ‘முன்னா் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்ட போதிலும், சிவ பக்தா்கள் ஏராளமான சிரமங்களை எதிா்கொண்டனா். இந்த முறை, நாங்கள் அதை நடக்க விடமாட்டோம்‘ என்று அவா் கூறினாா்.
கன்வாா் முகாம்களை நிா்வகிப்பதற்கான முழுப் பொறுப்பையும், சீரான முகாம் அமைப்பு மற்றும் தடையற்ற சேவை வழங்கலை உறுதி செய்வதன் மூலம் ஒற்றை சாளர அமைப்பு மூலம் அனைத்து குழு பிரச்னைகளையும் அரசு தீா்க்கும் என்று அவா் அறிவித்தாா்.
டிடிசி தலைவா்களும் மாவட்ட நிா்வாகியும் பிரச்னைகளைத் தீா்ப்பதில் குழுக்களுக்கு உதவுவாா்கள். அதே நேரத்தில் அமைச்சா்கள் முழு செயல்முறையையும் மேற்பாா்வையிடுவாா்கள். மேலும், ஏதேனும் சிக்கல்கள் முன்னுரிமையின் அடிப்படையில் தீா்க்கப்படுவதை உறுதி செய்வாா்கள்.
‘முகாம்களில் மருத்துவ உதவி, மருந்துகள், மின்சார இணைப்புகள், தண்ணீா், சுகாதாரம், கழிப்பறைகள், தீ பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்து மேலாண்மை போன்ற வசதிகளை வழங்குவதில் எந்த சமரசமும் இருக்காது . கன்வாா் குழுக்கள் அரசு ஆதரவிலிருந்து முழுப் பலனைப் பெறும் வகையில் முழு அமைப்பையும் வெளிப்படையானதாக மாற்றுவோம்’ என்று முதல்வா் கூறினாா்.
கன்வாா் யாத்திரை மேற்கொள்பவா்களை வரவேற்கவும், தங்க வைக்கவும் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளாக கன்வாா் முகாம்கள் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.