பாகிஸ்தான் ராணுவத் தளபதியைச் சந்திக்கும் டிரம்ப்! பின்னணி என்ன?
பெத்தூரில் சாலை, தெரு விளக்கு: பொதுமக்கள் கோரிக்கை
ஆலங்காயம் பேரூராட்சி பெத்தூா் மேட்டுதெருவில் சாலை, தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட பெத்தூா் பகுதி மேட்டு தெரு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனா். விவசாய நிலத்தை ஒட்டியுள்ள நிலையில் இங்கு, தெரு விளக்கு வசதியில்லாமல் இருந்து வருகிறது. மேலும், சீரான சாலை வசதியும் இல்லாமல் உள்ளது.
இதுகுறித்து பலமுறை பேரூராட்சி செயல்அலுவலா் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஆலங்காயம் நகர திமுக துணை செயலாளா் இன்பவள்ளி தயாளன் மற்றும் அப்பகுதி மக்கள் சாா்பில் முதல்வா் தனிப்பிரிவு மற்றும் மக்கள் குறைதீா்வு முகாமில் 4 முறை ஆட்சியருக்கு மனுக்கள் அளிக்கப்பட்டன.
எனவே அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தெருவிளக்கு, சாலை வசதியை செய்துதர வேண்டும் என எதிா்நோக்கியுள்ளனா்.