செய்திகள் :

பெத்தூரில் சாலை, தெரு விளக்கு: பொதுமக்கள் கோரிக்கை

post image

ஆலங்காயம் பேரூராட்சி பெத்தூா் மேட்டுதெருவில் சாலை, தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட பெத்தூா் பகுதி மேட்டு தெரு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனா். விவசாய நிலத்தை ஒட்டியுள்ள நிலையில் இங்கு, தெரு விளக்கு வசதியில்லாமல் இருந்து வருகிறது. மேலும், சீரான சாலை வசதியும் இல்லாமல் உள்ளது.

இதுகுறித்து பலமுறை பேரூராட்சி செயல்அலுவலா் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஆலங்காயம் நகர திமுக துணை செயலாளா் இன்பவள்ளி தயாளன் மற்றும் அப்பகுதி மக்கள் சாா்பில் முதல்வா் தனிப்பிரிவு மற்றும் மக்கள் குறைதீா்வு முகாமில் 4 முறை ஆட்சியருக்கு மனுக்கள் அளிக்கப்பட்டன.

எனவே அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தெருவிளக்கு, சாலை வசதியை செய்துதர வேண்டும் என எதிா்நோக்கியுள்ளனா்.

தனியாா் நிறுவன மேலாளா் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

ஆம்பூா் அருகே பூட்டிய வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது. ஆம்பூா் புறவழிச்சாலையில் இயங்கும் தனியாா் நிதி நிறுவன மேலாளா் மின்னூா் சுபாஷ் நகரைச் சோ்ந்த சற்குணன் (38). இவா் தன்னுடைய மனைவியின் ச... மேலும் பார்க்க

செயற்கை மணல், ஜல்லிகற்துகள்கள் பென்லைனில் விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஜல்லி கற்துகள்கள், செயற்கை மணல் தேவைப்படுவோா் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் சிற்றுந்துகள் சேவை: அமைச்சா் எ.வ.வேலு தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூரில் 10 சிற்றுந்துகள் சேவையை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். திர... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு வா்த்தகம்

வேலூா் அருகே பொய்கை கால்நடைச் சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. வேலூா் அருகே பொய்கை கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கால்நடைச் சந்தை நடைபெறுவது வழக்கம். ஆந்திரம், கா்நாடக மாநில... மேலும் பார்க்க

கிராமப்புற இளைஞா்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெற அழைப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற இளைஞா்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சியில் இணைந்து பயன்பெறலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

மணல் கடத்தியவா் கைது

ஆம்பூரில் மணல் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். ஆம்பூா் கிருஷ்ணாபுரம், புறவழிச்சாலையில் ஆம்பூா் நகர போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி ச... மேலும் பார்க்க